அமீரக செய்திகள்

துபாய்: மஹ்சூஸ் டிராவின் புதிய பரிசு அமைப்பு.. ஒரு எண் பொருந்தினாலும் இனி பரிசு.. ஒவ்வொரு வாரமும் 90,000 வெற்றியாளர்கள் பரிசுகளைப் பெறலாம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மஹ்சூஸ் டிரா இந்த வாரம் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் வாராந்திர டிராவிற்குப் பிறகு, புதிய பரிசு அமைப்பினை மேற்கொள்ள இருக்கிறது. அதன் படி, ஒவ்வொரு சனிக்கிழமையும் 5 முதல் 20 மில்லியன் திர்ஹம்கள் வரையிலான ரொக்கப் பரிசுகளுடன் அதிக வெற்றியாளர்களை உருவாக்கவுள்ளது.

அதாவது, மஹ்சூஸ் டிராவின் புதிய பரிசுத்தொகை அமைப்பில், ஒவ்வொரு வாரமும் வெற்றிபெறும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 3000 இலிருந்து 90,000 ஆக அதிகரிக்க உள்ளது. மேலும், மஹ்சூஸ் டிராவில் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய கிராண்ட் பரிசுகளை வெல்வது என்பது அவ்வளவு எளிதானது இல்லை.

எனவே, டிராவில் ஐந்து இலக்கங்களைப் பொருத்துபவர்கள் 20,000,000 திர்ஹம் என்ற கிராண்ட் பரிசைப் பெறுவார்கள் என்பதில் மாற்றமில்லை என்றாலும், புதிய பரிசு முறையின் மூலம், நான்கு, மூன்று மற்றும் இரண்டு எண்களைப் பொருத்தும் பங்கேற்பாளர்களும் பரிசுகளை வெல்லும் அற்புதமான வாய்ப்புகளை மஹ்சூஸ் அறிமுகப்படுத்துகிறது.

இதனால், அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களிடையே வெற்றியின் உற்சாகத்தைப் பரப்ப முடியும் என்று மஹ்சூஸ் டிரா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மஹ்சூசின் வாராந்திர டிராவில், 5 இல் நான்கு மற்றும் மூன்று எண்களைப் பொருத்தும் பங்கேற்பாளர்கள் 150,000 திர்ஹம்களையும், 2 எண்களைப் பொருத்தும் பங்கேற்பாளர்கள் 35 திர்ஹம்களையும் மற்றும் 1 எண்ணைப் பொருத்தினால் 5 திர்ஹம்களையும் பரிசாக பெற்றுக்கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி, ரேஃபிள் டிராவில் மூன்று அதிர்ஷ்டசாலி பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு வாரமும் உத்தரவாதமாக 100,000 திர்ஹம்களை வெல்ல முடியும். மேலும், இந்த புதிய பரிசு முறைக்கான குலுக்கல் முடிவுகள் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மஹ்சூஸ் டிரா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!