வளைகுடா செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி: மீண்டும் லாக்டவுனை அறிவித்தது ஓமான்..!!

ஓமானில் கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து மீண்டும் லாக்டவுனை கொரோனாவிற்கான உச்சக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி தனிநபர்கள் மற்றும் வாகனங்களின் இயக்கத்திற்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தடை விதிக்கப்படுவதாகவும், இந்த நேரங்களில் அனைத்து பொது இடங்களையும் வணிக நடவடிக்கைகளை மூடவும் உச்ச குழு முடிவு செய்துள்ளது.

இருப்பினும் முந்தைய இயக்கத்தடையின் போது அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கும் ஹோம் டெலிவரி சேவைக்கும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுநோயின் நிலைமை, குறிப்பாக நோய்த்தொற்றின் எண்ணிக்கை, மருத்துவமனைகள் மற்றும் தீவிர சிகிச்சை அறைகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறித்த அறிக்கைகளை குழு ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் இயக்கத்தடையானது ஞாயிற்றுக்கிழமை (நாளை) முதல் அமலுக்கு வந்து மறுஅறிவிப்பு வரும் வரையிலும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!