அமீரகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!! சில குடியிருப்பாளர்களால் உணரப்பட்டதாக தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வியாழக்கிழமை இரவு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்றும் இந்த நிலநடுக்கமானது சில குடியிருப்பாளர்களால் உணரப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 1.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் திப்பா அல் ஃபுஜைரா கடற்கரையில் இரவு 8 மணியளவில் பதிவானதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. NCM இது பற்றி தெரிவிக்கையில் குடியிருப்பாளர்களால் இந்த நிலநடுக்கம் சற்று உணரப்பட்டது ஆனால் இது நாட்டில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அவ்வப்போது ஏ்றபடும் இத்தகைய சிறி அளவிலான நிலநடுக்கங்கள் குறத்து குடியிருப்பாளர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று நில அதிர்வு நிபுணர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் NCM-ன் நிலநடுக்கவியல் துறையின் இயக்குனர் கலீஃபா அல் எப்ரி கூறுகையில் “அமீரகத்தில் குறைந்த அளவிலிருந்து மிதமான அளவிலான நில அதிர்வு அவ்வப்போது ஏற்படுகிறது. அதன்படி அமீரகத்தில் ஒரு வருடத்தில் இரண்டு முதல் மூன்று வரை அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. மக்கள் இந்த நடுக்கங்களை அதிகம் உணர்வதில்லை, அவை சென்சார்கள் மூலம் கண்டறியப்படுகின்றன. இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் கட்டிடங்கள் அல்லது உள்கட்டமைப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே குடியிருப்பாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.