அமீரக செய்திகள்

UAE: உங்கள் பிறந்தநாளை புர்ஜ் கலீஃபாவுடன் கொண்டாட அரிய வாய்ப்பு.. நீங்க ரெடியா..??

உங்கள் பிறந்தநாளோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களின் பிறந்தநாளோ பிப்ரவரி மாத இறுதிக்குள் வந்தால், நீங்கள் உலகின் மிக உயரமான கட்டிடத்தில் இருந்து பிறந்தநாள் வாழ்த்துகளை பெறலாம். இது குறித்த அறிவிப்பில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கரீஃபாவில் புதிய முயற்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புர்ஜ் கலீஃபா பிப்ரவரி 28 ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 8.45 மணிக்கு ‘உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ செய்திகளுடன் ஒளிரும் என கூறப்பட்டுள்ளது. பிறந்தநாள் கொண்டாடும் நீங்களோ அல்லது உங்களின் நண்பர்களோ, உறவினர்களோ துபாய் மால் வாட்டர்ஃபிரண்ட் பகுதிக்கு சென்று, புர்ஜ் கலீஃபா தெரியும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து, நிகழ்ச்சி தொடங்கும் போது பிறந்தநாள் நபரின் செல்ஃபிகள் அல்லது புகைப்படங்களைக் கிளிக் செய்து மகிழலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து Emaar-ன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த திட்டம் “பொதுவான பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி” என்று கூறியுள்ளார். அத்துடன் இந்த வாழ்த்து செய்தி, மூன்று நிமிடங்களுக்கு நீடிக்கும் என்றும் அந்த நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் எவரும் அந்த நிகழ்ச்சியை ரசித்து புகைப்படங்களை எடுக்கலாம் என்ற யோசனையின் விளைவாக இந்த முயற்சி எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட யாருக்காகவும் உருவாக்கப்படவில்லை என்றும் அந்த நாளில் பிறந்த நாள் கொண்டாடும் எவரும் இதில் இணையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி புர்ஜ் கலீஃபா சமூக ஊடக கணக்குகளில் பிறந்தநாள் செய்திகள் மற்றும் அலங்காரங்களுடன் கட்டிடம் ஒளிரும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் “உங்கள் சிறப்பு கொண்டாட்டங்கள் எங்களுடையது” என்றும் கூறப்பட்டுள்ளது.


உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் லேசர் காட்சிகள் இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் இந்த லேசர் காட்சிகள் மார்ச் 31 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!