அமீரக செய்திகள்

ஈரானில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. அமீரகத்தில் அதிர்வை உணர்ந்த குடியிருப்பாளர்கள்..!!

ஈரானில் இன்று (புதன்கிழமை) காலை 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து துபாயில் வசிப்பவர்களும் அதன் அதிர்வுகளை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர். தேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி, ஈரானின் தெற்கு பகுதியில் காலை 10.06 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது அமீரகத்தில் வசிப்பவர்களால் உணரப்பட்டாலும், “ஐக்கிய அரபு அமீ்கத்தில்” எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று அதகாரிகள் தெரிவித்துள்ளனர். அமீரகத்தில் இந்த நில அதிர்வுகள் உணரப்பட்டதையடுத்து சமூக ஊடகங்களில் பல குடியிருப்பாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து, நிலநடுக்கம் ஏற்பட்டதா என்பதை உறுதிப்படுத்த தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, அமீரகம் மட்டுமல்லாமல் மற்ற வளைகுடா நாடுகளான பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளும் இந்த அதிர்வுகளை உணர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!