கொரோனாவிற்கான PCR சோதனைக் கட்டணத்தை 150 திர்ஹம்ஸாகக் குறைத்த துபாய் சுகாதார ஆணையம்..!!
துபாயில் இருக்கும் துபாய் சுகாதார ஆணையமானது (DHA) கொரோனாவிற்காக மேற்கொள்ளப்படும் PCR சோதனைக்கான கட்டணத்தை குறைப்பதாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. தற்பொழுது கொரோனாவிற்கான PCR சோதனை கட்டணம் 150 திர்ஹம்ஸாகக் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், குறைக்கப்பட்ட விலைகள் தற்பொழுது அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று DHA உறுதிப்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் PCR சோதனைக்கு 250 திர்ஹம்ஸிற்கு மேல் கட்டணம் வசூலிக்காது என்றும் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
தனியார் மற்றும் பொது கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கான PCR சோதனைகளின் விலையை துபாய் சுகாதார ஆணையம் செப்டம்பர் 13 அன்று 250 திர்ஹம்ஸ் ஆகக் குறைத்தது. PCR சோதனைக்கான கட்டணத்தை குறைப்பது. கொரோனாவிற்கான சோதனைகளை பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதையும், கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கையாக மக்கள் சோதனை மேற்கொள்வதை ஊக்குவிப்பதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.