அமீரக செய்திகள்

புத்தாண்டுக்கு முக்கிய சாலைகளை மூடும் துபாய்!! கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் 10,000 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் நிறுத்தப்படுவார்கள் எனத் தகவல்…

துபாய் காவல்துறையானது புத்தாண்டு தினத்தன்று ஷேக் சையத் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. எனவே, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கொண்டாட்டங்களுக்காக டவுன்டவுன் பகுதி மற்றும் பிற பிரபலமான இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், தங்கள் பயணங்களை முன்கூட்டியே தொடங்கி பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

துபாய் காவல்துறையின் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த அப்துல் ரெஹ்மான் ஒபைத் ஜுமா அல் ஃபலாசி என்பவரின் கூற்றுப்படி, எமிரேட் முழுவதும் டிசம்பர் 31 மாலை 4 மணி முதல் சாலைகள் மூடப்படும் என்பது தெரிய வந்துள்ளது.

சாலை மூடல் விவரங்கள்:

  • முகமது பின் ரஷித் பவுல்வர்டு மாலை 4 மணிக்கு மூடப்படும்
  • ஃபைனான்சியல் ரோட்டின் மேல் மட்டம் இரவு 8 மணிக்கும் கீழ்மட்டம் மாலை 4 மணிக்கும் மூடப்படும்
  • அல் அசாயல் ஸ்ட்ரீட் மாலை 4 மணிக்கு மூடப்படும்
  • இந்த சாலைகளில் இருந்து அனைத்து போக்குவரத்தும் ஷேக் சையத் சாலைக்கு திருப்பி விடப்படும். ஷேக் சயீத் சாலை, துபாயின் தமனி நெடுஞ்சாலை, அனைத்து வகையான போக்குவரத்திற்கும் இரவு 9 மணிக்கு மூடப்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, 10,000 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் எமிரேட் முழுவதும், குறிப்பாக கொண்டாட்டங்கள் நடைபெறும் 32 இடங்களில் நிறுத்தப்படுவார்கள் என்றும், 1,300 வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அல் ஃபலாசி தெரிவித்துள்ளார். இதில் ஹட்டா, புர்ஜ் கலீஃபா, புர்ஜ் அல் அரப், ஃபெஸ்டிவல் சிட்டி மற்றும் பிற இடங்களும் அடங்கும்.

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு குழு மூன்று மாதங்களுக்கு முன்பு புத்தாண்டு தின திட்டத்தில் வேலை செய்யத் தொடங்கிவிட்டதாகவும், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம், சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸிற்கான துபாய் கார்ப்பரேஷன் போன்ற அனைத்து கூட்டாளர்களுடன் பல சந்திப்புகளை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், இந்த ஆண்டு, உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகள் தொடங்கி தொலைந்து போன சேவைகள் வரை, தேவைப்படுவோருக்கு அனைத்து ஆதரவுகளையும் வழங்குவதற்காக, இந்தப் பகுதிகள் அனைத்திலும் 30 துணைக் கூடாரங்களை நிறுவியுள்ளதாக அல் ஃபலாசி கூறியுள்ளார்.

கூடுதல் புதுப்பிப்புகள் மற்றும் ஆலோசனைகளுக்காக துபாய் காவல்துறையின் சமூக ஊடக தளங்களை மக்கள் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!