வளைகுடா செய்திகள்

ரமலான் மாத முதல் நாளை அறிவித்த சவூதி.. ஏப்ரல் 13 முதல் நோன்பு துவங்கும் என தகவல்..

இந்த வருட ரமலான் மாதத்திற்கான பிறை ஞாயிற்றுக்கிழமை தென்படவில்லை என சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி தெரிவித்துள்ளதால், ரமலான் மாத முதல் நாளானது ஏப்ரல் 13 ம் தேதி துவங்குவதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 12 (இன்று) ஷபான் மாத இறுதி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நாளை முதல் ரமலான் மாதத்திற்கான நோன்பு வைக்கப்படும் என்றும், ரமலான் மாதம் முடிந்து துவங்கும் ஷவ்வால் மாதமானது பிறை பார்ப்பதைப் பொறுத்து தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலேயே இந்த வருட நோன்பானது 29 நாட்கள் நீடிக்குமா அல்லது 30 நாட்கள் நீடிக்குமா என தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகமானது, சவூதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால், அமீரகத்திலும் நாளை முதலே நோன்பு துவங்கும் என கூறப்படுகின்றது. இருப்பினும், ஏப்ரல் 12 (இன்று) மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு அமீரக பிறை பார்க்கும் கமிட்டியின் சந்திப்பிற்குப் பிறகு அமீரகத்தில் ரமலான் மாதத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!