வளைகுடா செய்திகள்
இந்த வருட ஈத் அல் அத்ஹாவிற்கான தேதியை அறிவித்த ஓமான்..!!
ஓமானில் இருக்கும் பிறை பார்க்கும் குழுவானது இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாதத்திற்கான பிறையை சனிக்கிழமை பார்த்ததாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து இந்த வருட ஈத் அல் அத்ஹா வரும் ஜூலை 20 ம் தேதி கொண்டாடப்படும் என ஓமான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈத் அல் அத்ஹா துல் ஹஜ் மாதத்தின் 10 ம் நாள் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முழு நேர லாக்டவுன் அமலுக்கு வரவுள்ளது. இந்த முழுநேர லாக்டவுன் காலங்களில் கொரோனாவிற்கான தடுப்பூசி பிரச்சாரமும் இடைநிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.