PCR சோதனைகளுக்காக துபாய் விமான நிலையத்தில் மிகப்பெரிய ஆய்வகம்..!! ஒரு நாளைக்கு 100,000 மாதிரிகளை செயலாக்கும் என தகவல்..!!
கொரோனாவிற்கான PCR சோதனைகளைச் செயலாக்குவதற்கான உலகின் மிகப் பெரிய ஆய்வகத்தை தற்போது துபாய் சர்வதேச விமான நிலையம் கொண்டுள்ளது.
துபாய் விமான நிலையத்தின் டெர்மினல் 2 க்கு அருகில் அமைந்துள்ள 20,000 சதுர அடி பரப்பளவில் இருக்கும் இந்த ஆய்வகம் விமான நிலையத்தில் பயணிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட RT-PCR சோதனை மாதிரிகளைச் செயலாக்க பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது என்று துபாய் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
“சமீபத்திய WHO-வின் தரமான கோவிட் -19 RT-PCR சோதனை உபகரணங்களைப் பயன்படுத்தி, ஆய்வகம் ஒரு நாளைக்கு 100,000 மாதிரிகள் வரை செயலாக்க முடியும் மற்றும் சில மணி நேரங்களுக்குள் நம்பகமான முடிவுகளை வழங்க முடியும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் விமான நிலையங்கள் துபாய் சுகாதார ஆணையம் மற்றும் pure health உடன் இணைந்து ஜூன் 22 செவ்வாய்க்கிழமை ஆய்வகத்தை திறந்துள்ளன.
இந்த ஆய்வகம் சுகாதார மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கிடையில் பாதுகாப்பான மற்றும் எளிதான தகவல்களைப் பகிர்வதை உறுதி செய்யும் அரசாங்க அறிக்கை தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
துபாய் விமான நிலையங்களின் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் இது பற்றி கூறுகையில், “உலகின் பரபரப்பான சர்வதேச துபாய் சர்வதேச விமான நிலையத்தில்,சுகாதார நெறிமுறைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில் விமான நிலைய பயணம் பாதுகாப்பான, எளிதான மற்றும் விரைவான சேவை வழங்குவதை உறுதி செய்ய ஆர்வமாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.