அபுதாபிக்கு பயணித்தால் 12 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம்..!! விமான நிறுவனம் தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எத்திஹாட் ஏர்வேஸின் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு பயணிக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் 12 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நீங்கள் அபுதாபிக்கு வரும்போது, 12 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் உங்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட கைப்பட்டையை (wristband) அணிய வேண்டும்” என்று திருத்தப்பட்ட நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகள் இமிகிரேஷன் முடித்த பிறகு அபுதாபி விமான நிலையத்தில் அதிகாரிகளால் இந்த கைப்பட்டை வழங்கப்படும்.
“அபுதாபி வந்தடைந்த ஆறாம் நாள் மற்றும் பதினொன்றாம் நாளில் நீங்கள் PCR சோதனையும் எடுக்க வேண்டும்” என்று விமான நினுவனத்தின் இணையதளத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.
பயண முகவர்களுக்கு இந்திய விமான நிறுவனமான இண்டிகோ அனுப்பிய அறிவிப்பும் இந்த புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பிரதிபலிக்கிறது.
“வாடிக்கையாளர்கள் 12 நாட்கள் வீடு அல்லது நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.