ADVERTISEMENT

கொரோனா விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம்..!! புதுப்பட்டியலை வெளியிட்ட அமீரக அரசு..!!

Published: 19 May 2020, 2:11 AM |
Updated: 19 May 2020, 2:11 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம், கொரோனா வைரஸ் பரவலையொட்டி அறிவிக்கப்பட்ட விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு ஏற்கெனவே வெளியிட்டிருந்த அபராத பட்டியலை தற்பொழுது மாற்றியமைத்து புதுப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இது பற்றி, கூட்டாட்சி பொது வழக்கு விசாரணையின் அவசர மற்றும் பேரழிவுகள் வழக்கு விசாரணையின் தலைமை வழக்கறிஞர் சலீம் அல் ஜாபி கூறுகையில், மீண்டும் மீண்டும் விதிமீறல் புரிவோருக்கு அதிகபட்ச தண்டனையாக ஆறு மாத சிறை தண்டனையும் குறைந்தது ஒரு இலட்சம் திர்ஹம்ஸ் (Dh100,000) அபராதமும் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், இவ்வாறு விதிமீறல்களை தொடர்ந்து செய்யும் குற்றவாளிகள் பொது வழக்கு விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, விதிமீறலில் ஈடுபாடுபவரின் பெயர் மற்றும் புகைப்படம் Name and Shame என்றதன் அடிப்படையில், ஊடகங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிதாக வெளியிடப்பட்ட அபராத பட்டியலின் படி, வீட்டு தனிமைப்படுத்தல் அல்லது அதிகாரப்பூர்வ சுகாதார மையங்களில் தனிமைப்படுத்தலுக்கு இணங்க தவறியவர்களுக்கு (கொரோனாவால் பாதிக்கப்பட்ட அல்லது கொரோனா தொற்று இருக்கும் என சந்தேகிக்கப்படும் நபர்)  50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் தொடர்பான தகவல்களை வெளியிடும் எவருக்கும் 20,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சோதனை செய்ய மறுத்தால் 5000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “தேசிய சுத்திகரிப்பு திட்டம் மேற்கொள்ளப்படும் நேரங்களான இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரங்களில் உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட தேவைகள் அல்லது மருத்துவ அவசரநிலைகள் போன்ற அவசிய காரணங்களை தவிர மற்ற காரணங்களுக்காக இயக்க கட்டுப்பாடுகளை (movement restrictions) மீறுபவர்களுக்கு 3,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசாங்கம் வெளியிட்டுள்ள அபராத பட்டியல் பின்வருமாறு

தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள்

  • ஒரு விருந்து அல்லது கூட்டமாக ஒன்று கூடினால் அதனை ஏற்பாடு செய்தவருக்கு 10,000 திர்ஹம் மற்றும் அதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் 5,000 திர்ஹம் அபராதம்
  • வாகனங்களில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தால் 3,000 திர்ஹம் அபராதம்
  • சுத்திகரிப்பு நடைபெறும் காலத்தில் இயக்க கட்டுப்பாடுகளை மீறினால் 3,000 திர்ஹம் அபராதம்
  • வேலை செய்யும் இடங்கள் அல்லது கடைகள் மற்றும் உணவகங்கள் போன்ற பிற இடங்களில் சமூக இடைவெளியை பராமரிக்க தவறும் தனிநபருக்கு 3,000 திர்ஹம் அபராதம், நிறுவனங்களுக்கு 5,000 திர்ஹம் அபராதம்

அலுவலகங்கள்

  • வேலை செய்யும் இடங்கள் மற்றும் அலுவலகங்களில் முக கவசம் அணியாமல் இருந்தால் நிறுவனத்திற்கு 5,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஊழியருக்கு 500 திர்ஹம் அபராதம்
  •  அலுவலகத்தில் 30 சதவீததினர் மட்டுமே இருந்து பணிபுரிய வேண்டும் என்ற வரம்பை மீறினால் 3,000 திர்ஹம் அபராதம்

கொரோனா பரிசோதனை

  • வீட்டு தனிமைப்படுத்தலின் போது கடைபிடிக்கவேண்டிய விதிகளை மீறினால் 50,000 திர்ஹம் அபராதம்
  • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அவர்களை கண்காணிக்க உதவும் மொபைல் அப்ளிகேஷனை (smart App for COVID-19 tracing) தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய மறுக்கும் எந்தவொரு நபருக்கும் 10,000 திர்ஹம் அபராதம்
  • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட கண்காணிப்பு சாதனத்தையோ (tracking device) அல்லது மொபைல் அப்ளிகேஷனையோ சேதப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு 20,000 திர்ஹம் அபராதம்
  • கொரோனா பரிசோதனை செய்ய மறுத்தால் 5,000 திர்ஹம் அபராதம்
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு சோதனையை மீண்டும் செய்ய மறுத்தால் 1,000 திர்ஹம் அபராதம்

வணிகங்களுக்கு

  • பள்ளிகள், ஜிம்கள், சினிமா, பூங்காக்கள், கஃபேக்கள், உணவகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை மூட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு 50,000 திர்ஹம் அபராதம். மேலும், உணவகங்கள், பூங்காக்கள், மால்கள் போன்றவற்றிற்காக அரசாங்கம் விதித்துள்ள பார்வையாளர் நேரங்களை முறையாக கடைபிடிக்காதவர்களுக்கும் 50,000 திர்ஹம் அபராதம் பொருந்தும்
  • தேவையான இடங்களில் வெப்ப கேமராக்களை (thermal camera) வைக்கவில்லை எனில் சம்பந்தப்பட்டவர்களுக்கு 20,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்
  • அனுமதிக்கப்பட்ட நேரங்களை தாண்டியும் செயல்படும் கடைகளுக்கு 5,000 திர்ஹம் அபராதம்