துபாயை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் அமீரகத்தின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ் குழுமம் 2023-24 நிதியாண்டில் இதுவரை இல்லாதளவு சாதனை லாபத்தை ஈட்டியதைத் தொடர்ந்து, அதன் ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 20 வாரங்கள் மதிப்பிலான தொகையை மே மாத சம்பளத்துடன் போனஸாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் (Sheikh Ahmed bin Saeed Al Maktoum) அவர்கள் ஊடகங்களிடம் பேசுகையில், “எங்கள் கூட்டு லட்சியங்களை வலுப்படுத்துவதற்காகவும், இலட்சியத்தை அடைவதற்காகவும், 20 வார லாப பங்கின் ஒவ்வொரு திர்ஹத்திற்கும் நீங்கள் தகுதியானவர்” என்று ஊழியர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி அவர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நிலவரப்படி, எமிரேட்ஸ் நிறுவனத்தில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்து 112,406 ஆக உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள கடந்த ஆண்டில் Emirates மற்றும் Dnata போன்ற அவர்களின் ஊழியர்கள் இன்றுவரை கணிசமான லாபம் மற்றும் வருவாயைக் கண்டனர். எமிரேட்ஸ் குழுமத்தில் 170 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் 84 நாடுகளில் பரவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செய்தி ஊடகங்களிடம் போனஸ் குறித்து பேசிய சில ஊழியர்கள், மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதே போல் கடந்த ஆண்டு, எமிரேட்ஸ் அதன் ஊழியர்களுக்கு 24 வாரங்கள் மதிப்புள்ள சம்பளத்தை போனஸாக வழங்கி உற்சாகமூட்டியதுடன் இந்த வருடமும் 20 வாரங்கள் போனஸ் அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
எமிரேட்ஸ் குழுமம் ஈட்டிய லாபம்:
எமிரேட்ஸ் குழுமம் கடந்த ஆண்டை விட 71% அதிகரித்து 18.7 பில்லியன் திர்ஹம்ஸ் என்ற சாதனை லாபத்துடன் அதன் சிறந்த நிதிச் செயல்பாட்டை அறிவித்ததைத் தொடர்ந்து ஊழியர்களுக்கான போனஸை தற்பொழுது கூறியுள்ளது.
இது தொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “குழுமத்தின் வருவாய், லாபம், பணச் சொத்துக்கள் மற்றும் ஊழியர் எண்ணிக்கை மற்றும் எமிரேட்ஸின் லாபம் மற்றும் dnata வருவாய் ஆகியவற்றில் முக்கிய சாதனைகளை நாம் முறியடித்துள்ளோம். 2023-2024 ஆண்டு, எமிரேட்ஸ் குழுமத்தின் வரலாற்றில் மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும்” என்று CEO ஷேக் அகமது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எமிரேட்ஸின் பயணிகள் வருவாய் முதன்முறையாக 100 பில்லியன் திர்ஹம்ஸைத் தாண்டியுள்ளது. முன்னோக்கு சிந்தனை, புத்திசாலித்தனம், சரியான முதலீடுகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, மிகவும் திறமையான, அர்ப்பணிப்பு மற்றும் சுறுசுறுப்பான ஊழியர்களைக் கொண்டிருப்பதால் என்ன செய்ய முடியும் என்பதை எங்கள் முடிவுகள் நிரூபிக்கின்றன,” என்றும் அவர் மின்னஞ்சலில் எழுதியுள்ளார்.
எமிரேட்ஸ் குழுமம் வலுவான வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்ய அதன் செயல்பாடுகளை உலகம் முழுவதும் விரிவுபடுத்தியதைத் தொடர்ந்து, Emirates மற்றும் dnata இரண்டும் 2023-24 இல் குறிப்பிடத்தக்க லாபம் மற்றும் வருவாய் அதிகரிப்பைக் கண்டன. குழுவின் ரொக்க இருப்பு 47.1 பில்லியன் திர்ஹம்ஸ் ஆகும், இது இதுவரை அறிவிக்கப்படாத அதிகபட்ச தொகையும், கடந்த ஆண்டை விட 11% அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் முன்னேற்றம்:
எமிரேட்ஸ் வரும் ஆண்டில் 10 புதிய A350 விமானங்களைப் பெறும் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் முதல் யூனிட் கடற்படையில் இணைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஐந்து புதிய 777 சரக்கு விமானங்களைச் சேர்ப்பது குழுவின் சரக்கு நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, குழு தொடர்ந்து திறமையானவர்களை வேலைக்கு அமர்த்தும் என்று மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆயிரக்கணக்கான கேபின் பணியாளர்கள், விமானிகள், பொறியாளர்கள், வாடிக்கையாளர் சேவை முகவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிற நிபுணர்களுக்காக நாங்கள் உலகம் முழுவதும் தேடுகிறோம்” என்று ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதில் “dnata 2027 ஆம் ஆண்டிற்குள் ஆயிரக்கணக்கான புதிய சக ஊழியர்களை பணியமர்த்த உத்தேசித்து அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும், அதன் உறுதியான நடுத்தர கால திட்டங்களை அடையவும் உள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel