ADVERTISEMENT

துபாயின் ஸ்மார்ட் ரெண்டல் இன்டெக்ஸ்: பழைய கட்டிடங்களில் இனி வாடகையை உயர்த்த முடியாது..!! நிபுணர்கள் தகவல்.!!

Published: 8 Jan 2025, 7:54 PM |
Updated: 8 Jan 2025, 7:58 PM |
Posted By: Menaka

துபாய் நிலத் துறையின் (DLD) ஒரு பகுதியாக இருக்கும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை அமைப்பால் (RERA) கடந்த செப்டம்பர் 2021 இல் தொடங்கப்பட்ட ஸ்மார்ட் ரெண்டல் இன்டெக்ஸ் ஆனது, நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் (tenants) மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் வல்லுநர்களுக்கு நியாயமான மற்றும் போட்டித்தன்மையுள்ள வாடகை விலைகளை மதிப்பிட உதவுவதன் மூலம் வாடகை சந்தையில் அதிக வெளிப்படைத்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயில் இந்த ஸ்மார்ட் வாடகைக் குறியீடு (SRI) அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நவீன வசதிகள் இல்லாத சில பழைய கட்டிடங்களில் வாடகைகள் குறையலாம் என்றும், உயர்மட்ட வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்களின் உரிமையாளர்கள் 15 சதவீதம் வரை வாடகையை அதிகரிக்கலாம் என்றும் ரியல் எஸ்டேட் தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட் ரெண்டல் இன்டெக்ஸ் ஆனது, கட்டிடங்களின் வகைப்பாடு, கட்டிடத்தின் பழைய மற்றும் புதிய வாடகை மற்றும் கட்டிடம் உள்ள பகுதி உள்ளிட்ட பல புதிய அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. முக்கிய மாவட்டங்கள், சிறப்பு வளர்ச்சி மண்டலங்கள் மற்றும் இலவச மண்டலங்கள் உட்பட துபாயில் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளையும் இது உள்ளடக்கியது.

ADVERTISEMENT

இந்தக் குறியீட்டின்படி, பழைய கட்டிட உரிமையாளர்கள் வாடகையை உயர்த்துவதற்கு முன்பு தங்கள் சொத்துக்களை புதுப்பித்து மேம்படுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் புதிய கட்டிட உரிமையாளர்கள் சந்தை விலைகளுக்கு ஏற்ப கட்டணங்களை உயர்த்த முடியும் என்பதையும் ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதன்படி இந்த புதிய ஸ்மார்ட் அமைப்பானது வாடகை விலையை கட்டிட உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்றவாறு உயர்த்துவதை விட நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையில் அதிக கவனம் செலுத்துவதால், இரு தரப்பினருக்கும் ஒரு ‘நியாயமான’ வாடகை மற்றும் அதிகரிப்பு பொருந்துமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது.

ADVERTISEMENT

ரியல் எஸ்டேட் நிபுணர்களின் கருத்துப்படி, துபாய் மெரினா போன்ற சமூகங்களில், குறைந்த நவீன வசதிகளைக் கொண்ட பழைய கட்டிடங்களில் வாடகை குறையக்கூடும். அதாவது, நவீனமற்ற உட்புறங்கள் மற்றும் குறைந்த வசதிகள் காரணமாக, இந்த பழைய சொத்துக்களை புதுப்பிக்க மீண்டும் முதலீடு செய்ய வேண்டும் அல்லது குறைந்த வாடகையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறுகின்றனர்.

15 சதவீதம் வரை உயர்வு

மறுபுறம், உயர்மட்ட வசதிகளுடன் கூடிய புதிய, உயர்-குறிப்பிட்ட கட்டிடங்கள், அவற்றின் உண்மையான சந்தை மதிப்பு குறியீட்டில் பிரதிபலிக்கப்படுவதால், 5 முதல் 15-சதவீதம் வரை வாடகையை அதிகரிக்கலாம் என்பதையும் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், சொத்து விலைகளில் சமமான சந்தை உயர்வுக்கு அப்பால் துபாய் வாடகை அதிகரிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பினருக்கும் நன்மை பயக்கும் ஸ்மார்ட் ரெண்டல் இன்டெக்ஸ்

குத்தகைதாரர்கள் (tenants) எங்கு வாழ வேண்டும், எதற்காக வாடகை செலுத்துகிறார்கள் என்பதைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்து முடிவுகளை எடுக்க இது உதவுவதால், குத்தகைதாரர்களுக்கான நியாயமற்ற வாடகை உயர்வுகளுக்கு எதிராக இந்த குறியீடு ஒரு பாதுகாப்பு என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல், நில உரிமையாளர்களுக்கு, குறிப்பாக புதிய சொத்துகள் உள்ளவர்களுக்கு, இது ஒரு நன்மை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel