ADVERTISEMENT

UAE: ரமலானை முன்னிட்டு பள்ளிகளில் தொலைதூர கற்றலை அறிவித்துள்ள எமிரேட்டுகள்..!!

Published: 28 Feb 2025, 2:31 PM |
Updated: 28 Feb 2025, 2:31 PM |
Posted By: Menaka

ரமலான் மாதம் துவங்குவதை முன்னிட்டு பல்வேறு மாற்றங்கள் அமீரகத்தில் அறிவிக்கப்படுள்ளன. அவற்றில் அமீரகத்தில் செயல்படும் பள்ளிகளிலும் மாற்றங்கள் கூறப்பட்டுள்ளன. அதன்படி துபாயில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ரமலான் மாதத்தின் போது வெள்ளிக்கிழமைகளில் தொலைதூரக் கற்றலைத் தேர்வு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெள்ளிக்கிழமைகளில் தேர்விற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட மாணவர்களுக்கு இது பொருந்தாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் கல்வி அமைச்சகம் வெள்ளிக்கிழமைகளை பொதுப் பள்ளி மாணவர்களுக்கு தொலைதூரக் கற்றலுக்கான ஒரு நாளாக நியமித்தைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேசமயம், துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் உத்தரவின் அடிப்படையில், தொலைநிலை கற்றலை விரும்பாத குடும்பங்களுக்கு மாணவர்களை நேரில் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம் தனிப்பட்ட வகுப்புகளை வழங்கவும் பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதன் படி, வெள்ளிக்கிழமைகளில் தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல விரும்பும் பெற்றோருக்கு அனுப்புவதற்கான விருப்பம் இருக்கும் என்றாலும், ஆனால் பெற்றோர்களே போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

நெகிழ்வான வேலை நேரங்கள்

கூடுதலாக, துபாய் ரமலான் மாதத்தின் போது அரசு ஊழியர்களுக்கான நெகிழ்வான வேலை நேரங்களையும் தொலைதூர வேலைகளையும் செயல்படுத்தியுள்ளது. துபாயில் அதிகாரப்பூர்வ வேலை நேரம் திங்கள் மற்றும் வியாழக்கிழமை வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை வேலை செய்ய வேண்டும், வெள்ளிக்கிழமைகளில், வேலை நேரம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜ்மான்

துபாயைப் போலவே, அஜ்மான் எமிரேட்டிலும் தனியார் பள்ளி மாணவர்கள் ரமலான் மாதத்தின் போது வெள்ளிக்கிழமைகளில் தொலைநிலை கற்றலைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும், வெள்ளிக்கிழமைகளில் திட்டமிடப்பட்ட தேர்வுகள் உள்ள மாணவர்கள் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என்று அஜ்மானில் சிறப்பு கல்வி விவகார அலுவலகத்தின் நிர்வாக இயக்குனர் மஹ்மூத் கலீல் அல்-ஹஷ்மி தெரிவித்தார்.

ADVERTISEMENT

அஜ்மானின் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மர் பின் ஹுமைத் அல் நுவைமியின் உத்தரவின் கீழ் இந்த நடவடிக்கை, ரமலான் மாதத்தில் குடும்ப பிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், அஜ்மானில் உள்ள அரசு ஊழியர்களும் வெள்ளிக்கிழமைகளில் ரமலானின் போது தொலைதூரத்தில் வேலை செய்வார்கள் என்றும், அதிகாரப்பூர்வ வேலை நேரங்கள் காலை 9:00 மணி முதல் 2:30 மணி வரை வியாழக்கிழமை வரை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை இருக்கும் என்றும் அஜ்மான் அரசாங்கத்தின் மனிதவள துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel