ADVERTISEMENT

துபாயில் உள்ள மசூதிகளை ஆதரிக்க 560 மில்லியன் திர்ஹம்களை நன்கொடையாக வழங்கும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள்…

Published: 22 Mar 2025, 7:28 PM |
Updated: 22 Mar 2025, 7:28 PM |
Posted By: Menaka

துபாயில் உள்ள மசூதிகளின் கட்டுமானம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, துபாயில் உள்ள ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் 560 மில்லியன் திர்ஹம்களை நன்கொடையாக வழங்கியதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நன்கொடை இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறைக்கும் துபாய் நிலத் துறைக்கும் இடையிலான ஒரு மூலோபாய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இதில் பங்களித்த நிறுவனங்கள் பின்வருமாறு:

  • டமாக் (Damac)
  • டானூப் ப்ராப்பர்ட்டீஸ் (Danube Properties)
  • அசிசி டெவலப்மென்ட்ஸ் (Azizi developments)
  • HRE டெவலப்மென்ட்ஸ்
  • எமார் (Emaar)
  • ஓரோ24 டெவலப்மென்ட்ஸ்

சமீபத்தில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நேரில் காண துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் கலந்து கொண்டார். துபாயில் உள்ள மசூதிகளுக்கு நிதியளிக்க உதவும் மக்களையும் அவர் சந்தித்தார்.

ADVERTISEMENT

மேலும், அரசாங்கம், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இடையிலான இந்த கூட்டாண்மை துபாயின் வலுவான மதிப்புகள் மற்றும் தொண்டு மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என்று ஷேக் ஹம்தான் கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT