ADVERTISEMENT

மீண்டும் ஒரு உணவகத்தை மூடிய அதிகாரிகள்!! உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அபுதாபி அதிரடி நடவடிக்கை!!

Published: 11 Apr 2025, 2:58 PM |
Updated: 11 Apr 2025, 2:58 PM |
Posted By: Menaka

அபுதாபியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு மீறல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த உணவகத்தை மூடுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எமிரேட்டில் பொது சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் அபுதாபி முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கமான சோதனைகள் வணிகங்கள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரங்களைப் பின்பற்றுவதை உறுதி செய்ய உதவுகின்றன, மேலும் மீறுபவர்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், அபுதாபி வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையம் (ADAFSA) சமீபத்தில், நியூ ஷாஹாமாவில் உள்ள கோஹினூர் உணவகத்தை மூட உத்தரவிட்டுள்ளது.

CN-1080144 என்ற வர்த்தக உரிம எண்ணின் கீழ் இயங்கும் இந்த உணவகம், எமிரேட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான 2008 ஆம் ஆண்டின் சட்ட எண் (2) மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டத்தை மீறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ADAFSA அதிகாரிகள் வெளியிட்டுள்ள விபரங்களின் படி, உணவகம் பொது சுகாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தியது, இதன் விளைவாக ஏப்ரல் 10 வியாழக்கிழமை நிர்வாக ரீதியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் எமிரேட்டில் உள்ள பொது மக்களைப் பாதுகாக்கவும் பாதுகாப்புத் தரங்களை நிலைநிறுத்தவும் உணவு நிறுவனங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel