ADVERTISEMENT

ஷார்ஜா தீ விபத்தில் 5 பேர் பலியானதற்கு பாதுகாப்பு மீறல்களே காரணம்..!! விசாரணையில் தகவல்..!!

Published: 15 Apr 2025, 6:37 PM |
Updated: 15 Apr 2025, 6:37 PM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தீ விபத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த உயர் மட்ட கட்டிடத்தில் கடுமையான பாதுகாப்பு மீறல்கள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கட்டிட உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமை காலை 51 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், குடியிருப்பாளர்கள் மேல் தளங்களில் இருந்து தப்பிக்க முயன்றபோது இறந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த கட்டிடத்தில் 42 குடியிருப்பு தளங்கள் மற்றும் ஒன்பது நிலை பார்க்கிங் உள்ளன, ஒவ்வொரு தளத்திலும் ஆறு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அவசரகாலத்தின் போது, மொத்தம் 148 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஷார்ஜா சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.

ஷார்ஜா சிவில் பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் சாமி காமிஸ் அல் நக்பி, பாதிக்கப்பட்டவர்கள் கட்டிடத்தில் வண்ணம் தீட்டும் பணிக்காக நிறுவப்பட்ட கயிறுகளைப் பயன்படுத்தி கீழே இறங்க முயன்றதாகவும், ஒரு குடியிருப்பாளர் இறங்கும் போது உயிர் பிழைத்தாலும், மற்றவர்கள் தங்கள் பிடியை இழந்து விழுந்ததாகவும் சம்பவம் குறித்து விவரித்துள்ளார். அவர்களில்  ஒருவர் சாரக்கட்டையில் விழுந்ததாகவும், அது தாக்கத்தின் கீழ் இடிந்து விழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

A big disaster was avoided in the building as the cladding was removed recently. Building was under renovation with plaster and painting work.

விசாரணை மற்றும் பாதுகாப்பு மீறல்கள்

தீ விபத்து ஏற்பட்ட 42வது மாடியைத் தவிர, திங்கட்கிழமை குடியிருப்பாளர்கள் தங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள் தங்கள் விசாரணையைத் தொடர்வதால் விபத்து ஏற்பட்ட அந்த தளம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்த இறுதி அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, ​​நெரிசலான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அதிக சுமை கொண்ட மின்சார அமைப்புகள் உட்பட பல மீறல்களைக் கண்டறிந்ததாகவும், இந்த நிலைமைகள் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பாதுகாப்பு விதிமுறைகளை புறக்கணித்ததற்கு கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளர் பொறுப்பு எனக் கண்டறியப்பட்டால், அவர்கள் கடுமையான சட்ட விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும், சில குற்றங்கள் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படலாம் என்றும் பிரிகேடியர் அல் நக்பி தெரிவித்துள்ளார்.

Residents queue up to enter the fire effected building in Al Nahda Sharjah.

தீ பாதுகாப்பு பிரச்சாரம்

இச்சம்பவத்துக்கு முன்னர், கட்டிடம் ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களுக்காக எச்சரிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஷார்ஜா அரசாங்கத்தின் தீ பாதுகாப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அதன் எரியக்கூடிய உறைப்பூச்சு முன்பே அகற்றப்பட்டதாகவும், இது தீயைக் கட்டுப்படுத்தவும் அதிக உயிரிழப்பைத் தடுக்கவும் உதவியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் நம்புகின்றனர்.

அதிக ஆபத்துள்ள கட்டிடங்களில் தீ பாதுகாப்பை மேம்படுத்த ஷார்ஜா தற்போது பெரிய அளவிலான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதுவரை, முதல் கட்டத்தில் 40 கட்டிடங்களில் 20 கட்டிடங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel