ஐக்கிய அரபு அமீரகத்தில் வெப்பநிலை தீவிரமடைந்து வரும் நிலையில், ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை முதல் நாட்டில் வருடாந்திர மதிய வேலை தடை அமலுக்கு வரவுள்ளது. இந்த விதி அமலுக்கு வருவதற்கு முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) கட்டுமான தளங்களை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. அமீரகம் முழுவதும் மதியம் 12:30 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை நேரடி சூரிய ஒளியில் வெளிப்புறங்களில் வேலை செய்யத் தடை விதிக்கும் இந்த ஒழுங்குமுறை தற்போது அதன் 21வது ஆண்டில் உள்ளது, இது செப்டம்பர் 15 வரை நீடிக்கும்.
இந்த விதிகளுக்கு ஏற்ப பணியிடங்களின் தயார்நிலையை உறுதி செய்வதற்காக, MoHRE அமைச்சர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல் அவார் துபாயில் உள்ள ஒரு கட்டுமான தளத்தை ஆய்வு செய்தார். வெப்ப அழுத்தம் மற்றும் நீரிழப்பிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க நிறுவனங்கள் சரியான நிழல், குளிரூட்டும் உபகரணங்கள், குடிநீர், முதலுதவி பெட்டிகள் மற்றும் ஓய்வு பகுதிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீர் அல்லது மின்சார விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிப்படை சேவைகளில் ஏற்படும் செயலிழப்புகள் போன்ற சமூகத்தை பாதிக்கும் பாதிப்புகளை நிவர்த்தி செய்வது அல்லது பழுதுபார்ப்பது தொடர்பான பணிகள் இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விதியை மீறும் நிறுவனங்கள் ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம்ஸ் வீதம் அபராதம் விதிக்கப்படும், பல தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தால் 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே வேலை தடைசெய்யப்பட்ட நேரங்களில் எந்த தொழிலாளர்களும் வேலை செய்ய வைக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்ய, அதன் ஆய்வு அமைப்புகள் மூலம் கண்காணிக்கும் என்றும், மேலும் 600590000- ஐ அழைப்பதன் மூலமோ அல்லது அமைச்சகத்தின் வலைத்தளம் அல்லது ஸ்மார்ட் செயலியைப் பயன்படுத்துவதன் மூலமோ மீறல்களைப் புகாரளிக்க பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel