அமீரகத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் 32,000 திர்ஹம் பணம் இருந்த பையை தற்செயலாக விட்டுச் சென்ற துபாய் குடியிருப்பாளர், ஒரு திர்ஹம் கூட காணாமல் போகாமல் அதை மீண்டும் மீட்டெடுத்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு ஐக்கிய அரபு அமீரகத்தின் சமூக ஆண்டுடன் (community year) ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை மதியம் இம்தியாஸ் என்பவர் தனது நோய்வாய்ப்பட்ட சகோதரனை அஜ்மானில் உள்ள தும்பே மருத்துவமனையின் (Thumbay Hospital) அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றபோது இது நடந்தது. சகோதரரின் உடல் குறித்த கவலையால் திசைதிருப்பப்பட்ட அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் தனது பையை மறந்துவிட்டார். அதிர்ஷ்டவசமாக, அகமது என்ற அவசர சிகிச்சைப் பிரிவு செவிலியர் கவனிக்கப்படாத பையைக் கவனித்து, உடனடியாக மருத்துவமனையின் மேற்பார்வையாளர் ஹமீத் பின் ஹுசைனிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்து, உரிமையாளரைக் கண்டுபிடிக்க மருத்துவமனை பதிவுகளுடன் பையின் உள்ளே இருந்த ஐடியை ஒப்பிட்டுப் பார்த்தனர்.
அந்தப் பையில் முக்கியமான அடையாள ஆவணங்களும் ஏராளமான பணமும் இருந்தன. அவசர வருகையுடன் இணைக்கப்பட்ட தகவல்கள் மற்றும் பதிவுகளைப் பயன்படுத்தி மருத்துவமனை குழுவினர் இம்தியாஸைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர் என கூறப்படுகின்றது. பணம் மற்றும் ஆவணங்கள் நிறைந்த தனது பையை தொலைத்துவிட்டதை உணர்ந்த பிறகு, நாள் முழுவதும் பதற்றத்தில் இருந்ததாக இம்தியாஸ் கூறினார். “நான் அதை எங்கே வைத்தேன் என்று கூட எனக்கு நினைவில் இல்லை. மருத்துவமனையிலிருந்து அழைப்பு வரும் வரை நான் நம்பிக்கையின்றி நடந்து கொண்டிருந்தேன். அந்த அழைப்பிற்கு பின் எனக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
மேலும், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அவர் மிகுந்த நிம்மதியையும் நன்றியையும் தெரிவித்தார். “எனது ஆவணங்கள், எனது பணப்பை, பணம் என அனைத்தையும் பெற்றேன். இந்த வகையான நேர்மையை நீங்கள் எல்லா இடங்களிலும் காண முடியாது. அதனால்தான் நாங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை நேசிக்கிறோம்.” என்றும் கூறியுள்ளார்.
நேர்மைக்காக அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள்
இந்நிகழ்வைத் தொடர்ந்து, அதன் ஊழியர்களின் நேர்மை மற்றும் விரைவான நடவடிக்கையை மதிக்கும் வகையில், தும்பே மருத்துவமனை அஜ்மான் ஒரு பாராட்டு விழாவை நடத்தியது. மேலும், தும்பே ஹெல்த்கேரின் துணைத் தலைவர் அக்பர் மொய்தீன் தும்பே, குழுவை தனிப்பட்ட முறையில் பாராட்டியதாகக் கூறப்படுகின்றது. இந்த சம்பவம் ஐக்கிய அரபு அமீரகத்தை நேர்மை மற்றும் சமூகத்தின் கலாச்சாரத்திற்கு ஒரு சான்றாக செயல்படுவதை எடுத்து காட்டுகின்றது. மேலும், இது குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel