ADVERTISEMENT

UAE கோல்டன் விசா பற்றி தவறான செய்திகளை வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரிய நிறுவனம்: கோல்டன் விசாக்களுக்கான தனியார் ஆலோசனை சேவைகளை நிறுத்துவதாகவும் அறிவிப்பு!!

Published: 10 Jul 2025, 11:35 AM |
Updated: 10 Jul 2025, 11:36 AM |
Posted By: Menaka

துபாயை தளமாகக் கொண்டு செயல்படும் ராயாத் குழுமம் (Rayad Group), 100,000 திர்ஹம்ஸ் நிலையான கட்டணத்துடன் Lifetime UAE Golden Visa வழங்கப்படுவது பற்றிய கூற்றுக்கள் குறித்த ஒரு பொது விளக்கத்தை வெளியிட்டுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய செய்திக்குறிப்பை வெளியிட்டதில் குழு தனது பங்கை ஒப்புக்கொண்டது மற்றும் கோல்டன் விசா திட்டம் தொடர்பான தனியார் ஆலோசனை சேவைகளை வழங்குவதை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் (ICP) புதன்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில், குறிப்பிட்ட நாட்டினருக்கு வாழ்நாள் முழுவதுமான UAE கோல்டன் விசா ஏற்பாடு பற்றிய செய்தியை திட்டவட்டமாக மறுத்ததுடன், அனைத்து கோல்டன் விசா விண்ணப்பங்களும் அதிகாரப்பூர்வ UAE அரசாங்க சேனல்கள் வழியாக செயலாக்கப்படும் என்பதையும் பொதுமக்களுக்கு நினைவூட்டியது.

ICPயின் அறிக்கையைத் தொடர்ந்து, பதிலளித்த ராயத் குழுமம், இந்த முயற்சி, தகுதியான நபர்களுக்கு கோல்டன் விசா விண்ணப்பங்களை ஆதரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக உரிமம் பெற்ற இமிகிரேஷன் கூட்டாளர்களுடன் ஆராய்வு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும்,  இந்த நபர்கள் பொதுவாக UAE இன் பொருளாதார மற்றும் சமூக இலக்குகளுடன் ஒத்துப்போவார்கள் என்று விளக்கமளித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், “அனைத்து விசா முடிவுகளும் UAE அரசாங்க நிறுவனங்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கும்” என்று குறிப்பிட்ட நிறுவனம், “நாங்கள் ஏற்கனவே உள்ள சட்ட நடைமுறைகள் மூலம் தனியார் ஆலோசனை ஆதரவை மட்டுமே வழங்கினோம், ஒருபோதும் உத்தரவாதமான முடிவுகளை உறுதி செய்யவில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், சமீபத்திய அறிக்கைகள் மற்றும் விமர்சனங்களால் ஏற்பட்ட பொது குழப்பத்திற்கு மன்னிப்புக் கோரிய குழுமம், தவறான தகவல்களைத் தவிர்க்க கோல்டன் விசா தொடர்பான அனைத்து ஆலோசனை சேவைகளையும் நிறுத்துவதாக உறுதிப்படுத்தியுள்ளது.

அதன் நிர்வாக இயக்குநரால் வெளியிடப்பட்ட தெரிவிக்கப்பட்ட சில பொதுக் கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன என்றும், இந்தக் கருத்துக்கள் நிறுவனத்தின் நோக்கத்தையோ அல்லது அதன் சேவைகளின் வரம்புகளையோ பிரதிபலிக்கவில்லை என்றும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இந்நிகழ்வைத் தொடர்ந்து, கோல்டன் விசா குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக அதன் வலைத்தளம் அல்லது ஸ்மார்ட் செயலி போன்ற அதிகாரப்பூர்வ சேனல்களை மட்டுமே நம்பியிருக்குமாறு ICP பொதுமக்களை தொடர்ந்து வலியுறுத்துகிறது, மேலும் தவறான தகவல்களைப் பரப்பும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel