சவுதி அரேபியாவின் மனிதவளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (HRSD- Ministry of Human Resources and Social Development), தகுதிகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், வெளிநாட்டினருக்கான பணி அனுமதிகளை உயர் திறன், திறமையான மற்றும் அடிப்படை (high-skill, skilled, and basic) என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்த ஒரு புதிய முறையை அறிவித்துள்ளது. நாட்டின் தொழிலாளர் சந்தையை சிறப்பாக ஒழுங்கமைக்கவும், உள்ளூர் திறமைகளை வளர்க்கவும், நாட்டின் தொலைநோக்கு 2030 இலக்குகளை ஆதரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது எப்போது தொடங்கும்?
கடந்த ஜூன் 18, 2025 அன்று, ஏற்கனவே உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வகைப்பாடு தொடங்கியது. அதையடுத்து, ஜூலை 6, 2025இல் தற்போது சவுதியில் பணிபுரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையாக செயல்படுத்தப்பட்டது. இனி வருகின்ற ஆகஸ்ட் 3, 2025ஆம் தேதி முதல் சவுதி அரேபியாவிற்கு வரும் புதிய வெளிநாட்டினர் புதிய முறையைப் பின்பற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் மாற்றங்களைப் புரிந்துகொள்ள உதவும் விரிவான வழிகாட்டி அமைச்சகத்தின் வலைத்தளத்தில் கிடைக்கிறது.
தொழிலாளர்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுவார்கள்?
வெளிநாட்டு தொழிலாளர்கள் பின்வருவனவற்றின் அடிப்படையில் பிரிக்கப்படுவார்கள்:
- கல்வி
- பணி அனுபவம்
- தொழில்முறை திறன்கள்
- சம்பளம்
- வயது
புதிய விதியின் நோக்கங்கள்
- பணியாளர் செயல்திறனை மேம்படுத்துதல்
- திறமையான சர்வதேச திறமைகளை ஈர்த்தல்
- பொருத்தமான தகுதிகளுடன் வேலைகளை பொருத்துதல்
- வணிக கண்டுபிடிப்பு மற்றும் போட்டித்தன்மையை ஆதரித்தல்
- விதிமுறைகள் மற்றும் மேற்பார்வையை வலுப்படுத்துதல்
இந்த முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், சவுதி அரேபியா வெளிநாட்டு தொழிலாளர்கள் தெளிவான திறன் தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதோடு, உள்ளூர் பொருளாதாரம் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப வளரவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel