ADVERTISEMENT

UAE: உரிமம் பெறாத ஆட்சேர்ப்பு சேவைகளை ப்ரோமோஷன் செய்த சோஷியல் மீடியா கணக்குகள் முடக்கம்..!! அமீரக அரசு அதிரடி.!!

Published: 23 Jul 2025, 7:04 PM |
Updated: 23 Jul 2025, 7:20 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரிகள் இந்த ஆண்டின் முதல் பாதியில் உரிமம் பெறாத வீட்டுப் பணியாளர் ஆட்சேர்ப்பு சேவைகளை விளம்பரம் செய்த 77 சமூக ஊடகக் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) புதன்கிழமை அறிவித்தது. இந்த சோஷியல் மீடியா அக்கவுண்ட்ஸ் தேவையான ஒப்புதல்கள் இல்லாமல் ஆட்சேர்ப்பு சேவைகளை வழங்குவதாகவும், UAE தொழிலாளர் சட்டங்களை மீறுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக MoHRE வெளியிட்ட ஒரு அறிக்கையில், குடும்பங்கள் மற்றும் முதலாளிகள் தங்கள் சட்டப்பூர்வ உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய உரிமம் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நிறுவனங்களுடன் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் முழு பட்டியலானது அவற்றின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்களுடன் MoHREயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் “உரிமம் பெறாத வீட்டுப் பணியாளர் ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் அல்லது நம்பகத்தன்மையற்ற சமூக ஊடகப் பக்கங்களுடன் ஈடுபடுவது வாடிக்கையாளர்கள் தங்கள் சட்டப்பூர்வ உரிமைகளை இழக்க வழிவகுக்கும், அவை அமைச்சகத்தால் உரிமம் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுடன் பிரத்தியேகமாக கையாளும் போது உத்தரவாதம் அளிக்கப்படும்” என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் அதிகாரிகள் டிஜிட்டல் தளங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும், மேலும் முதலாளிகள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் இருவரையும் பாதுகாக்க ஒழுங்குபடுத்தப்படாத ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT