ADVERTISEMENT

இந்திய மூவர்ணக் கொடியில் ஒளிரும் புர்ஜ் கலீஃபா: 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய வெளிநாட்டவர் சமூகத்திற்கு பெருமை சேர்த்த தருணம்!!

Published: 16 Aug 2025, 12:58 PM |
Updated: 16 Aug 2025, 12:58 PM |
Posted By: Menaka

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) இரவு உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீஃபா இந்திய தேசிய கொடியின் காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் ஒளிர்ந்தது. இந்த அற்புதமான காட்சி, ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்தியாவுடனான நட்பு மற்றும் மரியாதையின் அடையாளமாகவும், நாட்டில் வசிக்கும் துடிப்பான இந்திய வெளிநாட்டவர் சமூகத்தை கௌரவிக்கும் விதமாகவும் அமைந்தது.

ADVERTISEMENT

ஏராளமான இந்திய வெளிநாட்டினர் ஆரவாரம் செய்து, கைதட்டி, தேசபக்தி கோஷங்களை எழுப்பிய இந்த தருணம் ஏராளமான மக்களை ஈர்த்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பலர் இந்த தருணத்தைப் படம்பிடித்து சுதந்திர தின வாழ்த்துச் செய்திகளுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்த நிலையில், வீடியோக்கள் விரைவாக வைரலானது.

இதனிடையே, துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தேசிய கீதத்தின் இசைக்கருவி பதிப்புடன் கூடிய ஒரு காணொளியையும் பகிர்ந்து கொண்டது: “உலகின் மிகச்சிறந்த அடையாளமான புர்ஜ் கலீஃபாவில் மூவர்ணக் கொடி நிமிர்ந்து நிற்கிறது, இது இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு இது பெருமை சேர்க்கும் தருணம்.” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

புர்ஜ் கலீஃபாவில் ஆண்டுதோறும் நடைபெறும் சுதந்திர தின ஒளிக்காட்சி, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்கள், கலாச்சார குழுக்கள் மற்றும் வணிகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்டங்களால் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் அதிகாரப்பூர்வ கொடி ஏற்றும் விழாக்களில், இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன், அனைத்து வயது இந்தியர்களும் உற்சாகமான பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT