ADVERTISEMENT

துபாயில் பொது தூய்மையை கெடுக்கும் மீறல்களை புகாரளிக்க புதிய ஆப்.. குடியிருப்பாளர்கள் கவனம்.!!

Published: 18 Aug 2025, 12:33 PM |
Updated: 18 Aug 2025, 12:41 PM |
Posted By: Menaka

உலகின் தூய்மையான நகரங்களில் ஒன்றான துபாய் அதன் நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் ‘Eltizam’ என்ற புதிய ஸ்மார்ட் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பொது தூய்மையை கெடுக்கும் மீறல்களை நிகழ்நேரத்தில் புகாரளிக்கவும் கண்காணிக்கவும் அதிகாரம் அளிக்கும் எனக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

இந்த செயலியின் மூலம், அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் விதி மீறல்களை புகைப்படம் எடுக்கலாம், இருப்பிடத்தை தானாக பதிவு செய்யலாம், சூழல் குறிப்புகளைச் சேர்க்கலாம் மற்றும் உடனடியாக அறிக்கைகளை சமர்ப்பிக்கலாம் என்று துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

துபாய் முனிசிபாலிட்டியின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு மைல்கல்லாக இந்த நடவடிக்கையை விவரித்த இயக்குநர் ஜெனரல் மர்வான் அகமது பின் காலிதா, “பொது தூய்மை என்பது ஒரு தொழில்நுட்ப பிரச்சினை மட்டுமல்ல, இது ஒரு குடிமை மதிப்பு மற்றும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பு, ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு குடிமகனும் வருங்கால தலைமுறைகளுக்கு நிலையான, வாழக்கூடிய துபாயை வடிவமைப்பதில் பங்கு வகிக்கிறார்கள் என்பதை இந்த ஆப் வலுப்படுத்துகிறது.” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், இந்த தளம் துபாயின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது என்பதையும் எடுத்துரைத்துள்ளார். ஏற்கனவே, இந்த ஆண்டின் தொடக்கத்தில், மோரி மெமோரியல் பவுண்டேஷனின் ஜப்பானின் குளோபல் பவர் சிட்டி இன்டெக்ஸ் (GPCI) அறிக்கையின்படி, துபாய் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகின் தூய்மையான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலி அதன் முதல் கட்டத்தில், நகரத்தின் அழகியல் தோற்றத்தை கெடுக்கும் பின்வரும் எட்டு முக்கிய மீறல்களை குறிவைக்கும்:

ADVERTISEMENT
  • பொது இடங்களில் துப்புதல்
  • சூயிங் கம்மை முறையற்ற முறையில் அகற்றுதல்
  • பொது இடங்களில் குப்பை கொட்டுதல்
  • கடல், கடற்கரைகள், சிற்றோடைகள் (creeks) அல்லது துறைமுகங்களில் கழிவுகளை கொட்டுதல்
  • குறிப்பிடப்படாத இடங்களில் வாகனம் கழுவும் தண்ணீரை ஊற்றுதல்
  • தடைசெய்யப்பட்ட பகுதிகளில் தீ வைப்பது அல்லது பார்பிக்யூ செய்தல்
  • பொது இடங்களை சிதைக்கும் துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள்
  • செல்லப்பிராணிகளை சுத்தம் செய்யத் தவறியது

இந்த நடைமுறையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலமும், நீதித்துறை அதிகாரிகளுக்கு ஸ்மார்ட் கருவிகளை வழங்குவதன் மூலமும், இந்த செயலி முன்முயற்சியுடன் கண்காணிப்பை மேம்படுத்துவது, வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது மற்றும் துபாயின் அழகியல் கவர்ச்சியைப் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel