அமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளான மீலாது நபியை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகின்ற செப்டம்பர் 5, 2025 வெள்ளிக்கிழமையன்று தனியார் துறை ஊழியர்களுக்கு பொது விடுமுறை நாளாக இருக்கும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இந்த விடுமுறை வார இறுதி நாட்களுடன் சேர்த்து வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் மூன்று நாள் விடுமுறையாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியில் 12 ரபி அல் அவ்வல் அன்று வருகிறது. முன்னதாக, பொதுத்துறை ஊழியர்களுக்கும் அதே விடுமுறையை அரசாங்கம் உறுதிப்படுத்தியிருந்தது, எனவே, இரு துறைகளுக்கும் இதன் மூலம் ஒரே மாதிரியான தொடர் விடுமுறை கிடைக்கும். அதே நேரத்தில் ஒரு நாள் மட்டும் வார விடுமுறை கொண்ட ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 23, சனிக்கிழமையன்று இஸ்லாமிய மாதமான ரபி அல் அவ்வலுக்கான பிறை நிலவு காணப்படவில்லை என்று ஐக்கிய அரபு அமீரக வானியல் மையத்திலிருந்து உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சஃபர் மாதம் 30 நாட்கள் நீடிக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டது, ரபி அல் அவ்வல் ஆகஸ்ட் 25 திங்கள் கிழமை தொடங்கியதால், இந்த ஆண்டு செப்டம்பர் 5 அன்று நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாள் அன்று வருகின்றது. வெள்ளிக்கிழமை இந்த நாள் வருவதையொட்டி தொடர் விடுமுறையாக ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel