ADVERTISEMENT

துபாய் சாலைகளில் அடுத்த வருடம் பயன்பாட்டிற்கு வரும் ரோபோடாக்ஸிஸ்.. RTA தகவல்!!

Published: 24 Sep 2025, 7:42 PM |
Updated: 24 Sep 2025, 7:42 PM |
Posted By: Menaka

2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வணிக ரீதியாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, துபாய் குடியிருப்பாளர்கள் விரைவில் சாலைகளில் டிரைவர் இல்லாமல் இயங்கும் டாக்ஸிகளைக் காணலாம் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து RTA இன் போக்குவரத்து அமைப்புகளின் இயக்குனர் கலீத் அல் அவதி கூறுகையில், துபாய் சிலிக்கான் ஒயாசிஸில் ஆரம்ப கட்ட சாலை சோதனைகளுக்குப் பிறகு ஜுமேரா போன்ற பகுதிகளில் சோதனைகள் நடந்து வருவதாகவும், இதுபோன்ற சேவைகளை அறிமுகப்படுத்துவதற்காக இரண்டு உலகளாவிய தானியங்கி வாகன நிறுவனங்களான Baidu (Apollo Go), Pony.ai மற்றும் WeRide ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது Baidu மற்றும் WeRide ஆகியவற்றால் சுமார் 60 வாகனங்கள் இயக்கப்படுவதாகவும், அவற்றில் சில நகரப் பகுதிகளில் பாதுகாப்பு ஓட்டுநர்களுடன் திறந்தவெளி சோதனைக்காக செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது குறித்து தெரிவிக்கையில் “2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் துபாயில் ரோபோடாக்சி சேவைகளை வழங்குவதே இதன் யோசனை. இது வணிக ரீதியாக பொதுமக்களுக்குக் கிடைக்கும்” என்று அல் அவதி இரண்டு நாள் துபாய் உலக மாநாடு மற்றும் சுய-ஓட்டுநர் போக்குவரத்துக்கான நிகழ்வில் கூறியுள்ளார்.

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வணிக நடவடிக்கைகள் தொடங்கியதும், தானியங்கி வாகனங்களுக்கான தற்போதைய விதிமுறைகளால் ஆதரிக்கப்படும் டாக்ஸிகள் முழுமையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் என்பதை RTA உறுதிப்படுத்தியது. பரந்த வெளியீட்டிற்கு முன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சோதனைகள் நிபுணர்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன என்பதையும் ஆணையம் வெளிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel