துபாயின் மிகவும் பிரபலமான குடும்ப சுற்றுலா தலங்களில் ஒன்றான துபாய் சஃபாரி பார்க் வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதியன்று அதன் ஏழாவது சீசனுக்காக பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று பூங்காவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அறிவித்துள்ளது.
கடந்த சீசனில், பார்வையாளர்களின் எண்ணிக்கையில் ஆண்டுக்கு ஆண்டு 16 சதவீதம் அதிகரிப்புடன் சாதனை எண்ணிக்கையை பதிவு செய்ததுடன் 52,700 க்கும் மேற்பட்ட சஃபாரி சுற்றுப்பயணங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் இந்த ஆண்டு, பார்வையாளர்கள் மீண்டும் 3,000 க்கும் மேற்பட்ட விலங்குகளைக் கொண்ட ஆறு கருப்பொருள் மண்டலங்களை ஆராயலாம் என்றும், இரண்டு சஃபாரி சாகசங்களை அனுபவிக்கலாம் மற்றும் அதன் ஷட்டில் ரயிலில் பூங்கா முழுவதும் பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விற்பனை இன்னும் தொடங்கவில்லை என்றாலும், பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த செயல்பாடுகள் திரும்பும் என்று எதிர்பார்க்கலாம் என்று பூங்கா நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது, அவற்றில் பின்வருவன அடங்கும்:
- சஃபாரி சாகசங்கள் – அரேபிய தீபகற்ப வனவிலங்குகளின் 15 நிமிட வழிகாட்டப்பட்ட டிரைவ்-த்ரூ சுற்றுப்பயணம் இதிலடங்கும்
- சஃபாரி சுற்றுலா – 35க்கும் மேற்பட்ட உலகளாவிய விலங்கு இனங்களைக் கண்டறிய 35 நிமிட பயணம், வழிகாட்டிகள் கல்வி நுண்ணறிவு மற்றும் தகவல்களை எடுத்துக் கூறுவார்கள்.
- விலங்கு காட்சிகள் – இந்த பூங்கா 3,000 க்கும் மேற்பட்ட விலங்குகளை அவற்றின் இயற்கை சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வாழ்விடங்களில் பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது.
- விலங்கு சந்திப்புகள் – பார்வையாளர்கள் விலங்குகளுடன் நெருக்கமாக இணைவதற்கு நேரடி உணவு முறை உள்ளிட்ட அனுபவங்களில் ஈடுபடலாம்.
இவ்வாறு சாகசம், கல்வி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகியவற்றின் கலவையை வழங்குவதன் மூலம், துபாய் சஃபாரி பூங்கா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள குடும்பங்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு ஒரு முக்கிய இடமாகத் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel