துபாய் உள்ள அல் பர்ஷாவில் ஒரு உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது எமிரேட்ஸ் மாலின் பார்க்கிங் இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக கட்டிடத்தில் இருந்த குடியிருப்பாளர்களை வெளியேற்றி தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இது குறித்து அல் பர்ஷா 1 இல் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில், “நான் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பல தீயணைப்பு வாகனங்கள் வரும் சத்தம் கேட்டது. நான் வெளியே சென்று பார்த்தபோது கட்டிடத்தின் மேல் தளம் தீப்பிடித்து எரிவதைக் கண்டேன்,” என்று தெரிவித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகின்றது.
தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுவிட்டதாகவும், குளிரூட்டும் நடவடிக்கைகள் முடிந்ததும் அந்த இடம் திறமையான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட கட்டிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த குடியிருப்பு கட்டிடத்திற்கு அருகிலுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel