துபாய் மற்றும் ஷார்ஜா இடையே பயணிக்கும் வாகன ஓட்டிகள் இன்று (செப்டம்பர் 16, செவ்வாய்க்கிழமை) காலை கடும் நெரிசலை எதிர்கொண்டதாகவும், குறிப்பாக, துபாய் நோக்கிச் செல்லும் எமிரேட்ஸ் சாலை (E311) மற்றும் E611 ஆகிய இரண்டிலும் போக்குவரத்து தாமதங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூகிள் மேப்ஸின்படி, பல பகுதிகள் போக்குவரத்து பாதிப்பை சந்தித்துள்ளன. , குறிப்பாக பு ஷகாரா, அல் மஜாஸ், சஹாரா மையம் மற்றும் அல் குசைஸ் பகுதி 5க்கு அருகில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது என கூறப்பட்டுள்ளது. பாதையின் பல பகுதிகளிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததால், பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாக வேதனை தெரிவித்துள்ளனர்.
இத்தகைய நெரிசலான உச்ச நேரங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும், மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ளவும், கூடுதல் பயண நேரத்தை அனுமதிக்கவும் ஓட்டுநர்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், வாகன ஓட்டிகள் பொறுமையாக இருக்கவும், நெரிசலைக் கட்டுப்படுத்தும் போது சாலை பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் வலியுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel