அபுதாபி காவல்துறையினர் பரபரப்பான சாலைகளில் வாகனங்கள் திடீரென நிறுத்தப்படுவதையும், பல மோதல்களைத் தூண்டுவதையும், பலத்த காயங்களை ஏற்படுத்துவதையும் காட்டும் வீடியோவைப் பகிர்ந்து, சாலையின் நடுவில் நிறுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோன்ற நடத்தை ஓட்டுநரின் உயிருக்கும் மற்ற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பிற்கும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், காரில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டால், அருகிலுள்ள வெளியேறும் இடம் அல்லது பாதுகாப்பான பகுதியை நோக்கிச் செல்வது அவசியம் என்றும் அதிகாரிகள் ஓட்டுநர்களுக்கு நினைவூட்டியுள்ளனர்.
இவ்வாறு சாலையின் நடுவில் நியாயமின்றி நிறுத்தும் வாகன ஓட்டிகளுக்கு 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு போக்குவரத்து புள்ளிகள் விதிக்கப்படும். கூடுதலாக, போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதால் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, சாலைகளில் செல்லும் போது, ஒரு வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தால், வாகன ஓட்டிகள் உடனடியாக 999 என்ற எண்ணை அழைத்து காவல்துறையினரை எச்சரிக்க வேண்டும், அவர்கள் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து இடையூறுகளைத் தடுக்க தேவையான ஆதரவை வழங்குவார்கள் என்பதையும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
அதேசமயம், சாலைகளில் சீரற்ற முறையில் நிற்கும் வாகனங்களை கண்டால் எச்சரிக்கையாக இருக்குமாறும் அதிகாரிகள் மற்ற சாலைப் பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஓட்டுநர்கள் அபாய விளக்குகளை இயக்க வேண்டும், பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க வேண்டும் மற்றும் சாலையில் திடீர் அசம்பாவிதங்களைத் தவிர்க்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
#فيديو | بثت #شرطة_أبوظبي بالتعاون مع مركز المتابعة والتحكم فيديو لحادث بسبب التوقف في وسط الطريق دون مبرر مما أدى إلى وقوع حوادث أخرى لمركبات لعدم الانتباه والانشغال بغير الطريق أثناء توقف حركة السير .
— شرطة أبوظبي (@ADPoliceHQ) October 3, 2025
وناشدت مديرية المرور والدوريات الأمنية بشرطة أبوظبي السائقين عدم التوقف في… pic.twitter.com/XMIXxpKUVY
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel