அபுதாபியின் பொது ஒளி கலை கண்காட்சியான மனார் அபுதாபியின் (Manar Abu Dhabi) இரண்டாவது பதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இதன் விளைவாக, அபுதாபியின் ஜுபைல் ஐலேண்ட் கண்கவர் ஒளியில் பிரகாசிக்கிறது. சதுப்புநிலங்கள், மணல் பாதைகள் மற்றும் திறந்தவெளிகள் என இயற்கை நிலப்பரப்புகளால் சூழப்பட்டிருந்த ஐலேண்ட் 22 ஒளி சார்ந்த கலைப்படைப்புகளைக் கொண்ட ஒரு வெளிப்புற காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது, இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு மாயாஜால அனுபவத்தை உறுதியளிக்கிறது.
அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையால் (DCT அபுதாபி) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டு கண்காட்சி “The Light Compass” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டது, இது ஒளி, நிலம் மற்றும் இயக்கத்திற்கு இடையிலான தொடர்பை விவரிக்கிறது. இந்த நிகழ்வு 10 நாடுகளைச் சேர்ந்த 15 கலைஞர்களை ஒன்றிணைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும், ஜூபைல் ஐலாண்ட் மற்றும் அல் அய்னில் உள்ள கலாச்சார தளங்கள் இரண்டிலும் நிறுவல்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த கண்காட்சி அனைவருக்கும் இலவசம் மற்றும் ஜனவரி 4, 2026 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இது குடியிருப்பாளர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒளி, இயற்கை மற்றும் படைப்பாற்றலின் இந்த தனித்துவமான கொண்டாட்டத்தை ஆராய நிறைய நேரத்தை வழங்குகிறது.
பார்வையாளர்கள் என்ன எதிர்பார்க்கலாம்?
பார்வையாளர்களை வரவேற்கும் முதல் நிறுவல்களில் ஒன்று அமெரிக்க கலைஞர் லாச்லான் துர்க்சானின் (Lachlan Turczan) கேட்வே (Gateway) இது லேசர் கற்றைகளால் நிரப்பப்பட்ட எஃகு வளைவுகளின் வரிசையாகும். பார்வையாளர்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களைக் கவனிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட மெதுவான பாதை என்று டர்க்சன் இதை விவரித்துள்ளார்.

அடுத்ததாக, பாதையில் விஸ்பர்ஸ் (whispers ) உள்ளது, இது பிறை வடிவ மணல்மேட்டில் அமைக்கப்பட்டிருக்கும், நூற்றுக்கணக்கான ஃபைபர்-ஆப்டிக் தண்டுகள் காற்றோடு அசைந்து, மாறிவரும் ஒளி வடிவங்களை உருவாக்குகின்றன. இதில் காற்று மாறும்போது ஒளிரும் புலத்தை மறுசீரமைக்கும் என்பதால், இயற்கையே கலைப்படைப்பைக் கட்டுப்படுத்துகிறது என்று கலைஞர்கள் விளக்குகிறார்கள்.

கூட்டத்தின் மற்றொரு விருப்பமானது மாண்ட்ரீலை தளமாகக் கொண்ட Public Squares ஆகும். இந்த மண்டலம் நான்கு டிஜிட்டல் நிறுவல்களைக் கொண்டுள்ளது. பார்வையாளர்கள் தங்கள் கைகளை அசைக்கும்போது அல்லது திரைகளைக் கடந்து செல்லும்போது, காட்சிகள் உடனடியாக மாறுகின்றன. கலைப்படைப்புகள் அவர்களின் சைகைகளுக்கு எதிர்வினையாற்றுவது குழந்தைகளை பெரிதும் உற்சாகமூட்டுகிறது.

இவற்றைத் தொடர்ந்து, அர்ஜென்டினா கலைஞரான சிக்ஸ் என் ஃபைவின் நிறுவலான ஸ்கைவர்ட் (Skyward) சதுப்புநிலங்களுக்கு இடையில் அமைதியான தருணங்களைக் கொண்டுவருகிறது. சாய்ந்த கண்ணாடி அங்குள்ள வானத்தையும் மரங்களையும் பிரதிபலிக்கிறது, பார்வையாளர்கள் சில வினாடிகள் அசையாமல் நிற்கும்போது, மென்மையான விண்மீன்கள் மெதுவாக மேற்பரப்பில் தோன்றும். இது பார்வையாளர்கள் இடைநிறுத்தி தங்கள் சுற்றுப்புறங்களை ரசிக்க ஊக்குவிக்கிறது.

இவற்றுடன் மலேசிய கலைஞர் பமீலா டானின் ‘Eden’ மிகவும் நுட்பமான அனுபவத்தை வழங்குகிறது. மெல்லிய எஃகு தண்டுகளில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி கோளங்கள் ஒளியை மெதுவாகப் பிடித்து பிரதிபலிக்கின்றன, மணல் மற்றும் அருகிலுள்ள தாவரங்களின் மீது நுட்பமான பிரகாசத்தை ஏற்படுத்துகின்றன. இயற்கையில் உள்ள சிறிய விவரங்களின் அழகை இந்தப் படைப்பு அற்புதமாக எடுத்துக்காட்டுவதால் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

இயற்கை நிலப்பரப்புகளில் பரவியுள்ள நிறுவல்களுடன், மனார் அபுதாபி ஒரு அமைதியான மற்றும் ஆழமான பயணத்தை வழங்குகிறது, அங்கு பார்வையாளர்கள் கண்காட்சிகளுடன் தொடர்பு கொள்ளவும், கலை சுற்றுச்சூழலுடன் எவ்வாறு கலக்கிறது என்பதையும் ஆராயலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel