நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து, உங்கள் முதலாளி உங்கள் சம்பளத்தை வழங்காமல் இருப்பது, கூடுதல் நேரம் வேலை, வருடாந்திர விடுப்பு ஊதியத்தை நிறுத்தி வைப்பது அல்லது அங்கீகரிக்கப்படாத சம்பளக்குறைவு போன்றவற்றை செய்தால், அது மன அழுத்தத்தை உண்டாக்கும். ஆனால் சட்டம் உங்கள் பக்கம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள அவேண்டும்.
அமீரகத்தின் தொழிலாளர் சட்டங்கள் அத்தகைய மீறல்களிலிருந்து தொழிலாளர்களை தெளிவாகப் பாதுகாக்கின்றன, மேலும் மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MOHRE) ஊழியர்கள் விதிமீறல்களைப் புகாரளிக்க ஊக்குவிக்கிறது. நீங்கள் தனியார் துறையில் பணிபுரிந்தால், உங்கள் முழு நிலுவைத் தொகையையும் பெற உங்களுக்கு உரிமை உண்டு, மேலும் புகார் தாக்கல் செய்ய ஒரு எளிய வழி உள்ளது. அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
MOHRE செயலியைப் பயன்படுத்தி சம்பளப் புகாரை எவ்வாறு தாக்கல் செய்வது?
MOHRE மொபைல் செயலி மூலம் செலுத்தப்படாத ஊதியத்தைப் புகாரளிக்கலாம்.
முதலில் உங்கள் மொபைலில் அப்ளிகேஷனை பதிவிறக்கி உங்கள் UAE PASS -ஐ பயன்படுத்தி உள்நுழையவும்.
- செயலியைத் திறந்து ‘Employee ‘ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர், முகப்புப் பக்கத்தில் ‘My Salary’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதையடுத்து, UAE PASS உங்கள் எமிரேட்ஸ் ஐடியுடன் இணைக்கப்பட்டுள்ளதால், உங்கள் வேலை விவரங்கள் தானாகவே திரையில் தோன்றும்.
- இப்போது, உங்கள் முதலாளி அல்லது HR இன் மொபைல் எண்ணை உள்ளிடவும். மேலும், சம்பளம், கூடுதல் நேரம் அல்லது ஊதியம் கழிக்கப்பட்ட தேதிகளைத் தேர்வு செய்யவும்.
பின்னர் உங்கள் புகாருக்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்:
- 15 நாட்களுக்கு மேல் சம்பளம் தாமதமானது
- 1 மாதத்திற்கு மேல் சம்பளம் தாமதமானது
- 2 மாதங்களுக்கும் மேல் சம்பளம் தாமதமானது
- சட்டவிரோதமாக சம்பளத்தை குறைத்தல்
- கூடுதல் நேர ஊதியம் பெறவில்லை
இப்போது, உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். இந்த சேவைக்கு கட்டணங்கள் எதுவும் இல்லை, மேலும் MOHRE பொதுவாக 14 நாட்களுக்குள் வழக்குகளைத் தீர்க்கும் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும், இத்தகைய சம்பள புகார்கள் ரகசியமாக இருக்கும் என்று MOHRE ஊழியர்களுக்கு உறுதியளிக்கிறது. அறிக்கையை யார் தாக்கல் செய்தார்கள் என்பதை உங்கள் முதலாளிக்கு தெரிவிக்கப்படாது.
புகார் தாக்கல் செய்த பிறகு என்ன நடக்கும்?
நீங்கள் வழக்கைச் சமர்ப்பித்த பிறகு, MOHRE உங்களையும் உங்கள் முதலாளியையும் தொடர்பு கொண்டு, பெரும்பாலும் அழைப்புகள் அல்லது விர்ச்சுவல் சந்திப்புகள் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கும்.
எந்த உடன்பாடும் எட்டப்படாவிட்டால்:
- 50,000 திர்ஹம் கீழ் உள்ள உரிமைகோரல்களுக்கு: MOHRE ஒரு இறுதியான, சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட முடிவை வெளியிடலாம்.
- 50,000 திர்ஹம் மேல் உள்ள உரிமைகோரல்களுக்கு: MOHRE ஒரு ஆட்சேபனையின்மை சான்றிதழ் (NOC) வழங்கும், இதன் மூலம் நீங்கள் வழக்கை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம்.
எனவே, நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் செலுத்தப்படாத ஊதியம், கூடுதல் நேர ஊதியத்தை தவறவிடுதல் அல்லது முறையற்ற விலக்குகளை எதிர்கொண்டால், சிக்கலைப் புறக்கணிக்காதீர்கள். அமீரகம் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் தெளிவான, கட்டமைக்கப்பட்ட செயல்முறையை வழங்குகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel