உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, சுற்றுலா இடங்கள், துடிப்பான நிகழ்வுகள், சிறந்த அனுபவங்கள் மற்றும் குடும்ப நட்பு விழாக்கள் ஆகியவற்றின் கலவையான துபாயானது ஆண்டுதோறும் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பயணிகளை ஈர்க்கிறது. இந்நிலையில், இந்த எமிரேட் கடந்த ஆண்டான 2025இல் மட்டும் சுமார் 19.59 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களை வரவேற்று புதிய சாதனை படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் அதிகரிப்பு என்று துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DET) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வலுவான செயல்திறன் துபாயின் தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டான சுற்றுலா வளர்ச்சியை குறிக்கிறது, இது உலகின் மிகவும் பிரபலமான பயண இடங்களில் ஒன்றாக துபாயின் நிலையை வலுப்படுத்துகிறது.
பிஸியான ஹோட்டல்கள் மற்றும் டிசம்பர் மாதத்தில் சாதனை
துபாயில் கடந்த ஆண்டு சராசரி ஹோட்டல் ஆக்கிரமிப்பு 80.7 சதவீதத்தை எட்டியது, இது 2024 இல் 78.2 சதவீதத்திலிருந்து அதிகரித்துள்ளது, இது வலுவான தேவையை பிரதிபலிக்கிறது.
மேலும், சுற்றுலாவாசிகள் தங்கிய ஹோட்டல் அறைகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வருடத்தில் 4 சதவீதம் உயர்ந்து 44.85 மில்லியனாக உள்ளது, இது வளர்ந்து வரும் விருந்தோம்பல் துறையால் ஆதரிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் புதிய ஆண்டு தொடங்கி, ஒரே மாதத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச பார்வையாளர்களை துபாய் வரவேற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும், டிசம்பரில் 2.04 மில்லியன் பார்வையாளர்களை வரவேற்றது, இது ஒரு வருடம் முன்பு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 6 சதவீதம் அதிகமாகும்.
இது குறித்து துபாயின் பட்டத்து இளவரசரும் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முடிவுகள் எமிரேட்டின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையையும் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பையும் பிரதிபலிக்கின்றன என்று தெரிவித்துள்ளார். மேலும், உலகின் முதல் மூன்று சுற்றுலா மையங்களில் நகரத்தை நிலைநிறுத்துவதற்கான துபாய் பொருளாதார நிகழ்ச்சி நிரல் (D33) இலக்கை இந்த வலுவான செயல்திறன் ஆதரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் இருந்து வரும் அதிகளவிலான பார்வையாளர்கள்
சுமார் 4.1 மில்லியன் பார்வையாளர்களுடன் துபாயின் மிகப்பெரிய மூல சந்தையாக மேற்கு ஐரோப்பா தொடர்ந்து உள்ளது, அதாவது மொத்த வருகையில் 21 சதவீதம் ஆகும், இது 2024 இல் 3.74 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து GCC, தெற்காசியா மற்றும் CIS மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகியவை உள்ளன, ஒவ்வொன்றும் சுமார் 15 சதவீதம் பார்வையாளர்களைக் கொண்டுள்ளன.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா (GCC தவிர்த்து), கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை பிற முக்கிய சந்தைகளில் அடங்கும், இது துபாயின் பரந்த உலகளாவிய ஈர்ப்பை எடுத்துக்காட்டுகிறது.
எதிர்கால இலக்கு
இத் குறித்து துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் இயக்குநர் ஜெனரல் ஹெலால் சயீத் அவர்கள் அல்மர்ரி கூறுகையில், சுற்றுலா துபாயின் பொருளாதார பன்முகத்தன்மையில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது, முதலீடு, வேலை உருவாக்கம் மற்றும் உலகளாவிய திறமை ஈர்ப்பை ஆதரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், துபாய் சர்வதேச விமான நிலையம் சர்வதேச பயணிகளுக்கு உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டது. துபாய் எமிரேட்டானது நீண்டகால வளர்ச்சியை ஆதரிக்க திறன், டிஜிட்டல் கண்டுபிடிப்பு மற்றும் நிலையான சுற்றுலா முயற்சிகளில் தொடர்ந்து முதலீடு செய்வதால், 2025 ஆம் ஆண்டின் வலுவான செயல்திறன் 2026 ஆம் ஆண்டிற்குள் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel