குவைத் அரசாங்கம், ஜனவரி 1, 2012 அன்று பிறந்தவர்கள் தொடங்கி, 18 வயது நிரம்பிய அனைத்து ஆண் குடிமக்களுக்கும் இராணுவத்தில் சேருவது கட்டாயம் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக குவைத் செய்தி நிறுவனம் (KUNA) வெளியிட்டுள்ள செய்தியின் படி, 2015 தேசிய இராணுவ சேவை சட்டத்தில் உள்ள சட்டமன்ற மற்றும் நடைமுறை இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
முக்கிய திருத்தங்கள்
திருத்தப்பட்ட சட்டம் பதிவு காலக்கெடுவை 60 நாட்களில் இருந்து 180 நாட்களாக நீட்டிக்கிறது மற்றும் ஒரே மகன் மட்டும் உள்ளவர்களுக்கு விலக்குகளை அனுமதிக்கிறது. மேலும், குவைத் எண்ணெய் நிறுவனத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் இப்போது குவைத் தீயணைப்பு படையின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்ற விலக்குகளைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்கள் விண்ணப்பங்களைச் செயலாக்குவதில் தாமதங்களைக் குறைப்பதையும், அசல் சட்டத்தில் தெளிவாகக் கவனிக்கப்படாத சிக்கல்களைத் தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேவைத் துறைகள்
புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ், தேசிய இராணுவ சேவை ஆணையம் நான்கு துறைகளில் ஏதேனும் ஒன்றிற்கு கட்டாய இராணுவ சேவையை நியமிக்கலாம்:
- குவைத் ஆயுதப்படைகள்
- உள்துறை அமைச்சகம்
- குவைத் தேசிய காவலர்
- குவைத் தீயணைப்பு படை
அதுமட்டுமல்லாமல், பணியமர்த்தப்பட்ட கட்டாய இராணுவ வீரர்கள் தங்கள் சேவை காலத்தில் தொடர்ந்து சம்பளம், அலவன்ஸ் மற்றும் போனஸ்களைப் பெறுவார்கள் என்று கூறப்படுகின்றது. மேலும், அவர்களின் சேவை நேரமும் அவர்களின் மொத்த வேலைவாய்ப்பு ஆண்டுகளில் கணக்கிடப்படும் என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel