துபாயில் உள்ள இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர், ஒரு விளம்பர பிரச்சாரத்தின் போது தங்க பிஸ்கட்டில் 15,000 திர்ஹம் முதலீடு செய்த பிறகு ஒரு சொகுசு மெர்சிடிஸ் காரை வென்றுள்ள சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அல் ஹப்தூரில் கால் சென்டர் ஊழியராகப் பணிபுரிந்து வரும் சுமித் என்ற அந்த வெற்றியாளர், 20 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்டில் உள்ள துபாய் கோல்ட் சூக்கிற்கு முதல் முறையாகச் சென்றபோது தங்கத்தை வாங்கியதாகவும், பல குடியிருப்பாளர்களைப் போலவே, தங்கத்தை எதிர்காலத்திற்கான பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீடாக கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அவர் செலவு செய்த ஒவ்வொரு 500 திர்ஹம்ஸ்க்கும் ஒரு வவுச்சரை வழங்கும் ‘Spend and Win’ என்ற பிரச்சாரத்தின் கீழ் அவருக்கு ரேஃபிள் கூப்பன்கள் கிடைத்துள்ளன. அவர் 15,000 திர்ஹம் மதிப்புள்ள தங்கத்தை வாங்கியதால், அவருக்கு 30 ரேஃபிள் நுழைவுகள் வழங்கப்பட்டதாகவும் சுமித் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சில நாட்களுக்குப் பிறகு, தனது இரவுப் பணியை முடித்த பிறகு, சுமித் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு ஒரு அழைப்பு வந்தது, அதில் அவர் தனது அசல் முதலீட்டை விட 50 மடங்கு மதிப்புள்ள மெர்சிடிஸ் கார் என்ற கிராண்ட் பரிசை வென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தத் தருணம் குறித்து நினைவு கூர்ந்த அவர், “அவர்கள் என் மின்னஞ்சலைப் பார்க்கச் சொன்னார்கள். நான் செய்தியைப் பார்த்தபோது, நான் கடவுளுக்கு நன்றி சொன்னேன்,” என்றும், விவரங்கள் உறுதிப்படுத்தப்படும் வரை செய்தியை நம்புவது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய சுமித், அப்பகுதிக்கு சென்ற நாளில் அந்த சொகுசு காருடன் ஒரு புகைப்படம் கூட எடுத்ததாகவும், உண்மையில் அதை வெல்வேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel