ADVERTISEMENT

மேலும் 2 வாரங்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை அறிவித்த அமீரகம்…

Published: 17 Mar 2026, 2:11 PM |
Updated: 17 Mar 2026, 2:11 PM |
Posted By: Menaka

பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் அமீரகம் முழுவதும் உள்ள மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற கல்வியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வசந்த கால விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்குத் தொலைதூரக் கற்றலைத் (Distance Learning) தொடரப்போவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கல்விசார் கால அட்டவணையில் முன்னதாகச் செய்யப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, கல்வி அமைச்சகம் மற்றும் உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த முடிவை அறிவித்துள்ளன.

வசந்த கால விடுமுறையானது மார்ச் 9 முதல் மார்ச் 22 வரை நீடிக்கும் என்றும், வகுப்புகள் மார்ச் 23 அன்று மீண்டும் தொடங்கும் என்றும் அதிகாரிகள் முன்னதாகவே அறிவித்திருந்தனர். இருப்பினும், மாணவர்கள் வகுப்பறைகளுக்குத் திரும்புவதற்குப் பதிலாக, மேலும் இரண்டு வாரங்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஈரான் தொடர்புடைய தாக்குல்களைத் தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்த நிலையில், கடந்த மார்ச் 2 முதல் வகுப்புகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டிருந்தன.

இதனையடுத்து மூன்றாவது கல்விப் பருவம் தொடங்கும் வேளையில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகள் மற்றும் அரசு, தனியார் பள்ளிகள் என அனைத்திற்கும் தொலைதூரக் கற்றல் முறை பொருந்தும் என்று கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த நடவடிக்கை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் என அனைவரையும் உள்ளடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிகாரிகள் சூழ்நிலையை மதிப்பிட்டு, அதிகாரப்பூர்வ பள்ளித் தகவல் வழிகள் மூலம் அவ்வப்போது தகவல்களை வழங்க, வாராந்திர ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, தங்கள் செயல்பாட்டுத் தேவைகளைப் பொறுத்து, நேரடி வகுப்புகளுக்குத் திரும்ப அனுமதி கோரி விண்ணப்பிக்கும் நெகிழ்வுத்தன்மையும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய கோரிக்கைகள், தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து ஆய்வு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கும் இதே திட்டம்

பள்ளிகளைப் போலவே, அமீரகத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் விடுமுறைக்குப் பிறகு மேலும் இரண்டு வாரங்களுக்குத் தொலைதூரக் கற்றலைத் தொடரும் என்று உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதேபோல், பல்கலைக்கழகங்கள் தங்கள் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில், கல்விசார் மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்கான பொருத்தமான ஏற்பாடுகளைத் தீர்மானிக்கும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பாளர்களுக்கு நெகிழ்வான பணிச்சூழல்

இது தொடர்பான மற்றொரு நடவடிக்கையாக, அரசு மனிதவளத்திற்கான கூட்டாட்சி ஆணையம் (Federal Authority for Government Human Resources), கூட்டாட்சி அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு நெகிழ்வான தொலைதூரப் பணி வாய்ப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, தொலைதூரப் பணிக்கு ஏற்ற பணிச்சூழலைக் கொண்ட பெற்றோர்களுக்கு இந்த ஏற்பாடு பொருந்தும். இது தொலைதூரக் கற்றல் நடைமுறையில் இருக்கும் காலத்தில், குறிப்பாக மழலையர் பள்ளி முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கு, நடைமுறையில் இருக்கும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதோடு, கல்வி மற்றும் பணியில் தொடர்ச்சியை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel