ஐக்கிய அரபு அமீரகத்தின் அட்டர்னி ஜெனரல் ஹமத் சைஃப் அல் ஷம்சி அவர்கள், தற்போதைய பிராந்திய பதட்டங்களின் போது சமூக ஊடகங்களில் அச்சுறுத்தும் மற்றும் போலியான வீடியோக்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வெவ்வேறு நாட்டினரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பொதுமக்களை தவறாக வழிநடத்தும் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பதிவுகளை பகிர்ந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டதை அடுத்து, சந்தேக நபர்களை அவசர விசாரணைக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஈரானுடன் தொடர்புடைய ஏவுகணை தாக்குதல்களுக்கு மத்தியில், டிஜிட்டல் தளங்களைத் தொடர்ந்து கண்காணித்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், அங்கு சிலர் தற்போதைய பிராந்திய முன்னேற்றங்களை தவறான தகவல்களைப் பரப்புவதற்காகப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் எகிப்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், பாகிஸ்தான், ஈரான், பங்களாதேஷ், கேமரூன் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும், இரண்டு இந்தியர்களும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, சந்தேக நபர்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதல்களை இடைமறிக்கும் உண்மையான காட்சிகளைக் காட்டும் வீடியோ கிளிப்களையும், தரையில் ஏவுகணை மற்றும் சம்பவங்களைக் கவனிக்கும் கூட்டத்தின் காட்சிகளையும் வெளியிட்டது தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், AI பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர், அவை வெடிப்புகள், நாட்டின் முக்கிய அடையாளங்களில் தாக்குதல்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு இடங்களில் பெரிய தீ விபத்துகள் ஆகியவற்றை தவறாக சித்தரித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், சில வீடியோக்கள் குழந்தைகளின் உணர்ச்சிகளைப் பயன்படுத்தியிருந்தன என்றும், அவை தவறான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தின என்றும், மற்ற கிளிப்புகள் இராணுவ வசதிகளை அழிப்பதாகவோ அல்லது பிற நாடுகளில் நடந்த சம்பவங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இடங்களுக்கு தவறாகக் காரணம் காட்டியதாகாவோ இருந்ததாலும் இது மக்களிடையே தேவையில்லாத பீதியை கிளப்பியதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் சந்தேக நபர்கள் தற்போது விசாரிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதை பொது வழக்கு துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சட்ட விளைவுகள்
உண்மையானதாகவோ அல்லது சித்தரிக்கப்பட்டதாகவோ இருந்தாலும் அத்தகைய வீடியோக்களை வெளியிடுவது பொது பாதுகாப்பை சேதப்படுத்தும், பீதியை பரப்பும் மற்றும் அதிகாரிகள் மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் இந்த பதிவு ,நாட்டின் பாதுகாப்பு திறன்களின் உண்மைகளை சிதைக்க அல்லது வெளிப்படுத்த ஊடக நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய பதிவுகளையும் வழங்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

எனவே ஐக்கிய அரபு அமீரக சட்டத்தின் கீழ், வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு குறைந்தது ஒரு வருடம் சிறைத்தண்டனை மற்றும் 100,000 திர்ஹம் முதல் அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும், நாட்டின் பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கை அச்சுறுத்தும் தவறான தகவல்களைப் பரப்ப சைபர்ஸ்பேஸ் அல்லது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் எவருக்கும் எதிராக அதிகாரிகள் உறுதியான சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று அட்டர்னி ஜெனரல் வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel