சமீபத்திய பிராந்திய பதட்டங்களைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் மற்றும் ஆபத்தான பதிவுகள் பரவலாக பரவி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை பெரும்பாலும் அமைதியாகவும் நிலையானதாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த சமயத்தில் ஏற்படும் பீதியை விட நாட்டின் தலைமை மற்றும் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையால் தினசரி வாழ்க்கை அமைதியாகவும் ஒழுங்காகவும் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்க்கை சாதாரணமாக நடந்தாலும், ஆன்லைனில் பரவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் வெளிநாடுகளில் உள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்தியதாகக் கூறுகின்றனர். அமீரகத்தில் மால்கள், கடைகள் மற்றும் சாலைகள் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருப்பதாகவும், போக்குவரத்து மற்றும் ஷாப்பிங் சாதாரணமாக தொடர்ந்தன என்றும் பல குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆன்லைனில் அச்சுறுத்தும் பதிவுகளைப் பார்த்த வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடமிருந்து கவலையான அழைப்புகளைப் பெற்றதாக பல குடியிருப்பாளர்கள் விவரித்த்துள்ளனர். தற்போது, அமீரகத்தில் மால்கள் பரபரப்பாக உள்ளன, உணவகங்கள் திறந்திருக்கின்றன, குடும்பங்கள் வழக்கம் போல் ஷாப்பிங் அல்லது உணவருந்திக்கொண்டிருக்கின்றன என்று அவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டியிருந்ததாகவும் அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், வேறு இடங்களில் போர்களை அனுபவித்தவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலைமை மிகவும் வித்தியாசமானது என்று வலியுறுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் வரும் ஓரளவு பயம் இயற்கையானது என்றாலும், குழப்பம் அல்லது அழிவு இல்லை என்றும், அன்றாட வாழ்க்கை கட்டுப்பாட்டில் இருந்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகள் நம்பிக்கையை வலுப்படுத்தியதாக பல குடியிருப்பாளர்கள் எடுத்துரைத்தனர். “நாங்கள் நாடு, தலைமை மற்றும் அரசாங்கத்தை நம்புகிறோம்,” என்று குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சமூக ஊடகங்கள் பதட்டத்தை அதிகரிக்கின்றன
கடைகள், மால்கள் மற்றும் சாலைகள் பரபரப்பாக இருந்தபோதிலும், குடியிருப்பாளர்கள் ஓரளவு எச்சரிக்கையாக இருப்பதை ஒப்புக்கொண்டனர். சமூக ஊடகங்கள் பெரும்பாலும் நிகழ்வுகளை மிகைப்படுத்தி காட்டுவதாகவும், அவை யதார்த்தத்தை விட மோசமாகத் தோன்றும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஒட்டுமொத்தமாக, ஐக்கிய அரபு அமீரகம் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் இருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் அறிவிக்கும் எச்சரிக்கை நியாயமானது, பயம் மனித இயல்பு, ஆனால் மிகைப்படுத்தலால் இயக்கப்படும் பீதி யாருக்கும் உதவாது என்பதையும் குடியிருப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel