அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையேயான மோதலின் விளைவாக தொடர்ந்து நிலவி வரும் பிராந்திய பதற்றங்கள் தொடர்பான தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் படம்பிடித்துப் பரப்பியதற்காக 375 நபர்களை அபுதாபி காவல்துறை கைது செய்துள்ளது.
சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதற்கு எதிராக மீண்டும் மீண்டும் எச்சரிக்கப்பட்ட போதிலும், சில தனிநபர்கள் இன்னும் அறிவுறுத்தல்களை மீறியதாகவும், எனவேதான் இந்தக் கைதுகள் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைக்காக அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அமீரகத்தில் இத்தகைய தவறான தகவல்கள் மூலம் பீதியைப் பரப்புவதும், பொதுமக்களின் கருத்தைப் பாதிப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என்றும், இதுபோன்ற நடத்தை பொறுத்துக்கொள்ளப்படாது என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
மேலும், தகவல்களுக்கு அதிகாரப்பூர்வமான ஆதாரங்களை மட்டுமே நம்புமாறும், வதந்திகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மோதல் தொடங்கியதிலிருந்து இதேபோன்ற மீறல்களுக்காக நூற்றுக்கணக்கானோர் ஏற்கனவே காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகத் தளங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel