ADVERTISEMENT

எரிபொருள் விலை உயர்வின் எதிரொலி: அமீரக பெட்ரோல் நிலையங்களில் ஒரு மணி நேரம் வரை வரிசைகளில் காத்திருந்த வாகன ஓட்டிகள்!!!

Published: 1 Apr 2026, 12:10 PM |
Updated: 1 Apr 2026, 12:10 PM |
Posted By: Menaka

மார்ச் மாதத்தின் இறுதியில் ஏப்ரல் மாதத்திற்கான திருத்தப்பட்ட எரிபொருள் விலைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய எரிபொருள் விலைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள வாகன ஓட்டிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு எரிபொருள் நிரப்ப பெட்ரோல் நிலையங்களுக்கு விரைந்தனர். இதனால், பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக, அல் வர்கா, ஷேக் முகமது பின் சையத் சாலை மற்றும் ஷார்ஜா போன்ற பகுதிகளில் உள்ள நிலையங்களைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூகுள் மேப்ஸ் போன்ற வழிசெலுத்தல் செயலிகள் சிவப்பு எச்சரிக்கையைக் காட்டியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை நேரத்தில் எரிபொருள் நிரப்ப சில நிமிடங்கள் மட்டுமே ஆன நிலையில், இரவு 8 மணிக்குப் பிறகு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தததாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். வரிசைகள் பெட்ரோல் நிலையம் அருகிலுள்ள சாலைகள் வரை நீண்டிருந்ததாகவும், காத்திருப்பு நேரம் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

எரிபொருள் விலை உயர்வுக்கு முன்பு அதிகபட்ச சேமிப்பைப் பெறுவதற்காக, பல குடியிருப்பாளர்கள் தங்கள் வருகைகளை கவனமாகத் திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

40 திர்ஹம்ஸ் முதல் 60 திர்ஹம்ஸ் வரையிலான சிறிய சேமிப்பு கூட பெரிய விஷயம் தான் என்று கூறி பலரும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

பெரிய வாகனங்கள், பெரிய சேமிப்பு

இதனிடையே, பெரிய வாகனங்களைக் கொண்ட ஓட்டுநர்கள் இன்னும் அதிகப் பலனைக் கண்டனர்:

  • ஒரு டொயோட்டா கொரோலா (50 லிட்டர் டேங்க்): சுமார் 40 திர்ஹம்ஸ் சேமிக்கலாம்
  • ஒரு நிசான் பாத்ஃபைண்டர் (73 லிட்டர் டேங்க்): கிட்டத்தட்ட 58 திர்ஹம்ஸ் சேமிக்கலாம்
  • ஒரு நிசான் பேட்ரோல் (140 லிட்டர் டேங்க்): 100 திர்ஹம்ஸ்க்கு மேல் சேமிக்கலாம்

அதுமட்டுமில்லாமல், சில வாகன ஓட்டிகள், விலை உயர்வுக்கு முன் கூடுதல் எரிபொருளை நிரப்புவதை உறுதி செய்வதற்காக, எரிபொருள் குறையும் பொருட்டு பகலில் கூடுதலாக வாகனத்தை ஓட்டியதாகக் கூறியுள்ளனர்.

இவர்களுடன் தினசரி வருமானத்திற்காக எரிபொருளை நம்பியிருப்பவர்களும் நீண்டநேரம் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, போக்குவரத்துத் தொழிலாளர்கள், டெலிவரி ஓட்டுநர்கள் மற்றும் வர்த்தக வாகன உரிமையாளர்கள் வரிசைகளில் காத்திருந்தனர், ஏனெனில் எரிபொருள் செலவுகள் அவர்களின் வருமானத்தை நேரடியாகப் பாதிக்கின்றன. ஒவ்வொரு முறை நிரப்பும்போதும் கிடைக்கும் சிறிய சேமிப்பு கூட காலப்போக்கில் கணிசமாகக் கூடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் இரவு நேரத்திலும் தேவை அதிகரித்ததால், வழக்கமான நிறுத்தங்கள் நீண்ட காத்திருப்புகளாக மாறின. இதனால், நாடு முழுவதும் உள்ள நிலையங்களில் இதே போன்ற காட்சிகள் பதிவாகியதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel