ADVERTISEMENT

கொரோனா எதிரொலி : சவூதி அரேபியாவில் VAT 5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்வு..!!

Published: 11 May 2020, 9:48 AM |
Updated: 1 Jul 2020, 11:00 AM |
Posted By: admin

சவூதி அரேபியாவின் அரசாங்கம் கச்சா எண்ணெய் வீழ்ச்சி மற்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அரசின் பொருளாதார நிதிகளை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வாழ்க்கைச் செலவுக்கான அலவன்ஸை (Living Cost Allowance) நிறுத்துவதாகவும், மதிப்பு கூட்டப்பட்ட வரி (Value Added Tax,VAT) ஐ மூன்று மடங்காக உயர்த்துவதாகவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, வரும் ஜூன் மாதம் முதல் (June 1,2020) தேதியிலிருந்து Living Cost Allowance நிறுத்தப்படும் என்றும் மேலும் ஜூலை மாதம் முதல் (July 1,2020) தேதியின்படி மதிப்பு கூட்டப்பட்ட வரியானது (VAT) 5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் அந்நாட்டின் செய்தி நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது.

சவூதி பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், உலகளாவிய கோவிட் -19 தொற்றுநோயின் முன்னோடியில்லாத வகையில் நிதி மற்றும் பொருளாதார பாதிப்புகளைச் சமாளிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை நிதியமைச்சர் மற்றும் பொருளாதார மற்றும் திட்டமிடல் அமைச்சர் முகமது அல்ஜாதான் எடுத்துரைத்தார். மேலும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களைப் பாதுகாக்க தேவையான மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

எண்ணெய் தேவை குறைவு

தொற்றுநோயை எதிர்த்து உலகளவில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, நாட்டில் ஏற்பட்ட முதல் பொருளாதார சரிவு இதற்கு முன்னில்லாத வகையில் எண்ணெய் தேவை வீழ்ச்சியடைந்ததாகும். இது எண்ணெய் விலைகளை குறைக்க வழிவகுத்தது மற்றும் நாட்டின் பொது வருவாயின் முக்கிய ஆதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எண்ணெய் வருவாயில் சரிவு ஏற்பட்டதற்கு காரணமாக அமைந்தது என்று அமைச்சர் விளக்கினார்.

ADVERTISEMENT

பொருளாதார சரிவுகள்

இரண்டாவதாக, குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும், தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பல உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் இடைநிறுத்தவோ குறைக்கவோ செய்யப்பட்டன. இதன்மூலம் அவை எண்ணெய் அல்லாத வருவாய் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின.

மூன்றாவது பொருளாதார சரிவு என்பது திட்டமிடப்படாத செலவுகள் ஆகும், இது சுகாதார சேவையின் தடுப்பு மற்றும் சிகிச்சை திறனை ஆதரிப்பதற்காக சுகாதாரத் துறைக்கு அதிகளவிலான தேவைகளை அரசாங்கம் செய்தது. கூடுதலாக கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட சரிவடைந்த பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கும், பொருளாதார விளைவுகளைத் தணிப்பதற்கும் குடிமக்களுக்கான வேலைகளைப் பராமரிப்பதற்கும் பல முயற்சிகளை மேற்கொண்டது.

செலவினங்களில் குறைப்பு

மேற்கூறப்பட்ட பொருளாதார சவால்கள் இணைந்து பொது வருவாய் குறைவதற்கு வழிவகுத்ததாகவும், நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க செய்ய நாட்டின் பொது நிதி மீது அழுத்தம் கொடுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எனவே, செலவினங்களில் மேலும் குறைப்பு தேவைப்படுகிறது, அத்துடன் எண்ணெய் அல்லாத வருவாயை உறுதிப்படுத்த உதவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதன்படி, நிதி அமைச்சகம் மற்றும் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சகம் இந்த நிதி மற்றும் பொருளாதார முன்னேற்றங்களையும் அவற்றைச் சமாளிப்பதற்கான முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளையும் தற்பொழுது முன்வைத்துள்ளன. மேலும், மிகவும் பொருத்தமான மற்றும் குறைவான தீங்கு விளைவிக்கும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சவூதி அரேபியாவின் விஷன் 2030 (Vision 2030) க்கான சில செலவினங்களை குறைக்கவோ, ரத்து செய்யவோ அல்லது ஒத்தி வைக்கவோ முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Living Cost Allowance நிறுத்தப்படல் மற்றும் VAT சதவீத உயர்வு

கூடுதலாக, Living Cost Allowance ஜூன் 2020 முதல் தேதியிலிருந்து நிறுத்தப்படும் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வரியானது ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து 5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், நவீன வரலாற்றில் உலகம் இதுவரை கண்டிராத ஒரு நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். இறுதியாக, “சிவில் சர்வீஸிற்கு வெளியே உருவாக்கப்பட்ட புதிய அரசாங்க நிறுவனங்களின் சம்பளங்கள் மற்றும் சலுகைகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு பெரும்பாலும் வழக்கமான அரசு ஊழியர்களை விட அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. அத்தகைய நிறுவனங்களில் விஷன் 2030 செயல்பாடுகளும் அடங்கும். எனவே இதற்கான நடவடிக்கை குறித்து, கமிட்டி தனது பரிந்துரைகளை 30 நாட்களுக்குள் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.