ADVERTISEMENT

குவைத் கொரோனா அப்டேட் (ஆகஸ்ட் 31, 2020) : பாதிக்கப்பட்டோர் 473 பேர்..!! குணமடைந்தோர் 574 பேர்..!!

Published: 31 Aug 2020, 2:41 PM |
Updated: 31 Aug 2020, 2:41 PM |
Posted By: admin

குவைத்தில் இன்று (திங்கள்கிழமை, ஆகஸ்ட் 31, 2020) புதிதாக 473 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குவைத்தின் சுகாதார அமைச்சகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குவைத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 85,109 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

குவைத்தில் கொரோனாவிற்கு ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 531 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 574 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 77,224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT