குவைத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 25, 2020) புதிதாக 613 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குவைத்தின் சுகாதார அமைச்சகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குவைத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 81,573 ஆக உயர்ந்துள்ளது.
குவைத்தில் கொரோனாவிற்கு ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 477 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 73,402 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.