ஓமானில் இன்று (ஆகஸ்ட் 13, 2020) புதிதாக 232 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், ஓமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 82,531 ஆக ஆத்திகரித்துள்ளது.
மேலும், இன்று புதிதாக 12 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் இதனால் ஓமானில் கொரோனவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 551 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 77,278 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.