ADVERTISEMENT

இரண்டு வருடங்களுக்குப் பின் கட்டுப்பாடுகளை நீக்கும் மலேசியா..!!

Published: 11 Mar 2022, 1:03 PM |
Updated: 11 Mar 2022, 1:05 PM |
Posted By: admin

மலேசியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்றால் ஏப்ரல் 1 முதல் தனது எல்லைகளை முழுமையாக மீண்டும் திறக்கவிருப்பதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த மார்ச் 2020 முதல் மலேசியா, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தொடர்ந்து பராமரித்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளால் வெளிநாட்டினர் மலேசியா பயணிப்பதற்கும் மலேசிய குடிமக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதிலும் சிக்கல்கள் இருந்து வந்தன.

இந்நிலையில் அடுத்த மாதம் முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி ஒரு தொலைக்காட்சி உரையில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவது மலேசியாவின் அண்டை நாடுகளான தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளால் எடுக்கப்பட்ட இதேபோன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றி எடுக்கப்பட்டுள்ளது என்றும், புறப்படுவதற்கு முன்பும் மலேசியா வந்த பிறகும் மேற்கொள்ளப்படும் சோதனையில் எதிர்மறை முடிவைப் பெற்ற தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் விலக்கு அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வருடத்திற்கும் மேலாக நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ள மலேசிய குடிமக்கள் இனி சர்வதேச பயணத்தை முழுமையாக தொடரலாம் என்று இஸ்மாயில் சப்ரி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் வணிக இயக்க நேரம், கூட்டங்கள், சமூக இடைவெளி மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பயணம் ஆகியவற்றுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.