துபாய் சர்வதேச விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதை புதுப்பிக்கும் திட்டத்தின் காரணமாக, மே 9 முதல் ஜூன் 22, 2022 வரை 45 நாட்களுக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு பதிலாக மற்ற இடங்களுக்கு குறிப்பிட்ட விமான சேவைகள் திருப்பி விடப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.
அதில் இந்த ஓடுபாதை மூடல் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு பதிலாக துபாய் வேர்ல்ட் சென்ட்ரலில் (DWC) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு விமானங்களை இயக்குவதாக துபாயின் பட்ஜெட் கேரியரான ஃப்ளைதுபாய் அறிவித்துள்ளது.
மேலும் பயணிகளுக்கு சரியான தகவல்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, பயணம் செய்வதற்கு முன், அவர்கள் புறப்படும் மற்றும் வந்தடையும் விமான நிலையங்களைச் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் flydubai.com இல் உள்ள ‘Manage Booking’ பிரிவில் கிடைக்கும் மற்றும் முன்பதிவு உறுதிப்படுத்தல்களில் தெளிவாகக் குறிப்பிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் DWC இலிருந்து பயணிக்கும் பயணிகள் விமான நிலையத்தில் இலவச பார்க்கிங்கை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் DWC மற்றும் துபாய் விமான நிலையத்தில் உள்ள அனைத்து டெர்மினல்களுக்கும் இடையே ஒரு இலவச பேருந்து சேவையை வழங்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பயணிகள் தங்கள் முழுப் பயணத்திற்கும் IATA பயண மையத்தின் விதிமுறைகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதையும், அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலைப் பின்பற்றுவதையும் உறுதிசெய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு flydubai.com இல் உள்ள கொரோனா தகவல் மையத்தையும் பயணிகள் பார்வையிடலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.