துபாய்: 88வது வாராந்திர மஹ்சூஸ் டிராவில் இந்தியர் ஒருவர் 5 லட்சம் திர்ஹம்ஸ் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவை சேர்ந்த ஷானவாஸ் என்பவர் கடந்த 18 மாதங்களாக மஹ்சூஸ் டிராவில் தவறாமல் பங்கேற்று வருகிறார். தற்போது இவருக்கு ஒரே இரவில் வாழ்க்கை மாறிவிட்டது. இந்த டிராபவிம் இன்றுவரை, இந்தியாவைச் சேர்ந்த 50,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர், அவர்களில் 3000-க்கும் மேற்பட்டோர் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்றுள்ளனர்.
41 வயதான ஷானவாஸுக்கு வெற்றி குறித்து அவருக்குத் அழைப்பு வந்தபோது அவர் நம்பவில்லை. இது தொடர்பாக கூறிய அவர், “எண்களை அதிகம் யோசிக்காமல் தற்செயலாகத் தேர்ந்தெடுத்தது எனக்கு நினைவிருக்கிறது, அதன் பிறகு டிராவின் போது எனது எண்கள் திரையில் இருப்பதைக் கவனிக்காமல் பணிக்குச் சென்றுவிட்டேன். எனது குடும்பத்தை விட்டு விலகி, கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறேன்” என்றார்.
இந்த வெற்றி பரிசுகளக் எவ்வாறு பயன்படுத்துவது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை, ஆனால் நான் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து பணியாற்றுவேன். ஏனெனில் இந்த நாடு எனக்கு கனவு காணும் திறனைக் கொடுத்துள்ளது என்றார் ஷானவாஸ்.