ADVERTISEMENT

துபாய்: ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சுங்க வரி.. Dh300-க்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கு கட்டாயம்..!!

Published: 6 Jan 2023, 4:39 PM |
Updated: 6 Jan 2023, 4:39 PM |
Posted By: admin

துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் சர்வதேச அளவில் அதாவது வெளிநாடுகளில் இருந்து 300 திர்ஹம்களுக்கு மேல் ஷாப்பிங் செய்யும் பொருட்களுக்கு புதிய சுங்க வரியை (Customs Duty) துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் துபாய் கஸ்டம்ஸின் 2022 இன் அறிவிப்பு எண்.5-ன் படி, இந்த புதிய சுங்க வரி மற்றும் சுங்க அனுமதி சட்டம் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் துபாய் கஸ்டம்ஸ் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய சுங்க வரி குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 2022 ஆம் ஆண்டின் GCC மாநிலங்களுக்கான ஒருங்கிணைந்த சுங்க வரி விதிப்பின்படி, பூஜ்ஜிய சதவீத விலக்கு விகிதத்திற்கு உட்பட்ட பொருட்களை தவிர, வேறொரு நாட்டிலிருந்து வாங்கப்படும் மற்ற பொருட்களின் மதிப்பு 300 திர்ஹம்களுக்கு மேல் இருந்தால், அந்த பொருட்களுக்கு சுங்க வரி விகிதம் ஐந்து சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது 300 திர்ஹம்களுக்கு மேல் சர்வதேச அளவில் ஷாப்பிங் செய்யும் குடியிருப்பாளர்கள், இனிமேல் அந்த பொருட்களுக்கான ஐந்து சதவீத மதிப்பு கூட்டப்பட்ட வரியுடன் (VAT) சேர்த்து, ஐந்து சதவீத இறக்குமதி சுங்க வரியும் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

எனினும், 300 திர்ஹம்களுக்கு குறைவான மதிப்பில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும், ஆனால் புகையிலை, புகையிலை பொருட்கள், இ-சிகரெட்டுகள், நிகோடின் திரவம், மதுபானங்கள் மற்றும் ஆல்கஹால் கொண்ட உணவுகள் ஆகியவை சுங்க வரி விலக்கில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக புகையிலை, புகையிலை பொருட்கள், இ-சிகரெட்டுகள் மற்றும் இ-சிகரெட்டுகளுக்கான திரவங்கள் ஆகியவற்றிற்கு பாவ வரியுடன் (Sin Tax) சேர்த்து கூடுதலாக 200 சதவீதம் என்ற விகிதத்தில் அதிக சுங்க வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2017 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகம் கார்பனேட்டட் பானங்கள், ஆற்றல் பானங்கள், புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் போன்ற மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு கலால் வரியை (Excise Tax) அறிமுகப்படுத்தியிருந்தது. பின்னர் மின் புகைபிடிக்கும் சாதனங்கள் மற்றும் கருவிகள், அத்தகைய சாதனங்களில் பயன்படுத்தப்படும் திரவங்கள் மற்றும் இனிப்பு பானங்கள் போன்றவற்றையும் கலால் வரி வரம்பிற்குள் கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.