ADVERTISEMENT

ரமலானை முன்னிட்டு 399 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்ட ஷார்ஜா ஆட்சியாளர்..!!..

Published: 23 Mar 2023, 5:50 PM |
Updated: 23 Mar 2023, 6:03 PM |
Posted By: admin

ரமலான் மாதத்தை முன்னிட்டு பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட பல்வேறு தேசங்களைச் சேர்ந்த 399 கைதிகளை விடுதலை செய்யுமாறு சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

தண்டனை மற்றும் சீர்திருத்த நிறுவனங்களில் இருக்கும் இந்த கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஷார்ஜாவின் ஆட்சியாளரின் ஆர்வத்தின் அடிப்படையில், குற்றவாளிகளுக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கும், அவர்கள் சமூகத்திற்குத் திரும்பி நல்ல நபர்களாக மாறுவதற்கும் அவர்களின் குடும்பங்களின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஷார்ஜா காவல்துறையின் தலைமைத் தளபதி, மேஜர் ஜெனரல் சைஃப் அல்-ஜாரி அல்-ஷம்சி,  குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்காக  ஷார்ஜாவின் ஆட்சியாளருக்கு தனது மிக உயர்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதற்கு முன்னர் அமீரக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமீரகத்தின் மற்ற தலைவர்களும் ரமலானை முன்னிட்டு சிறைகைதிகளுக்கு விடுதலை வழங்க உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.